கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ குழுவுக்கு திமுக கடிதம்
சென்னை: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, முதல்வர் விஜய் இன்று அரசு பணிக்கான ஆணையை வழங்க உள்ளார்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான சி.பி.ஐ., விசாரணையை மேற்பார்வையிடும், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவுக்கு, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: கரூர் த.வெ.க., பிரசார கூட்டத்தின்போது, நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு, அரசு பணிக்கான நியமன ஆணைகளை முதல்வர் விஜய் இன்று கரூர் சென்று வழங்க உள்ளார்.
வழக்கு விசாரணையில் சாட்சிகளாக உள்ள அந்த குடும்பத்தினர் மீது, எவ்வித செல்வாக்கும் செலுத்தப்படக் கூடாது.
அதற்கு, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை, தலைமை செயலரும், சி.பி.ஐ.,யும் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பணி நியமனம் வழங்க, எந்த எதிர்ப்பும் இல்லை.
ஆனால், சி.பி.ஐ., விசாரணைக்கு உட்பட்ட, அதே சம்பவத்தின் முக்கிய சாட்சிகளுக்கு வழங்கப்படும் நலன்கள், விசாரணையின் சுதந்திரம் மற்றும் நியாயத்தன்மை குறித்து, இது சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும்.
இவ்வழக்கின் சாட்சிகள் மீது, அரசின் நலத்திட்ட உதவிகளால், எந்த தாக்கமும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
2025 செப்டம்பர் 27ல் விஜய் கரூர் செல்ல சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் காலை 9.30 மணிக்கே வந்தவர் சிறிது ஓய்வு எடுத்து கொண்டு பின் 85 கி.மீ உள்ள தூரத்தை ஹெலிகாப்டர் மூலம் கரூர் சென்றிருந்தால் கால தாமதத்தை வெகுவாக தவிர்த்து இருக்கலாம். எந்த பிரச்சனையும் வந்திருக்காது. பொது மக்களுக்கும் எந்த ஏமாற்றமும் இருந்திருக்காது. உயிர்ச் சேதமும் நிகழ்ந்து இருக்காது. அது தேர்தல் நேர சுற்றுப்பயணம் இல்லை என்பதால் அவரது பெரம்பலூர்
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு 10லட்சம் திமுக தந்தது
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நேரடியாக அரசு அலுவலர் பணி வழங்கியதில் இருந்து ஆரம்பித்த போக்கு இது. தாங்கள் களப் பலி ஆகி தங்கள் அபிமான நடிகருக்கு வெற்றி தேடித் தந்ததால் அவர் செய்யும் நன்றி கடன்.
கரூர் சம்பவத்தில் பலன்கள் த வெ க வுக்கு பழி திமுகவின் மீது விழுந்து விட்டது. அதை தவிர்க்க திமுக முயற்சி செய்கிறது, மக்களின் தீர்ப்பு தேர்தலில் தெரிந்து விட்டது. அதை உணர்ந்து அடக்கி வாசிக்க வேண்டும்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதற்கு முதல்வர் விஜய் இன்று கரூர் சென்று கருணை அடிப்படையில் 32 பேருக்கு அரசு பணி வழங்க உள்ள நிலையில், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே லட்சக்கணக்கான தகுதியுள்ள பட்டதாரி இளைஞர்கள் TNPSC மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நியாயமான முறையில் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களது வேலைக்கு உத்தரவாதம் தர முன் வராத அரசு,ஆட்சிக்கு வந்ததும் தங்கள் கட்சி நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகள் வழங்குவது மிக தவறான முன் மாதிரி. எதிர்காலத்தில் ஒவ்வொரு கட்சியும் இதை போன்ற உரிமையை கோர முடியும். கூட்ட நெரிசல் ஏற்பட்டதே விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதால் தான் வழக்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், முறையான விதிகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக அரசு வேலைகளை எவருக்கும் வழங்குவது படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு உரிமையையும் பறிக்கும் செயல்.
உயிரிழந்த குடும்பத்தினருக்கு விஜய் சார்பில் கணிசமான
ஒரு தொகை ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் ஆட்சியில் அப்போது இருந்த திமுக அரசும் மனிதாபிமான அடிப்படையில் அரசு சார்பில் நிதியை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக வழங்கி இருக்கிறது. பிரதமர் நிதியிலிருந்தும் நிதி உதவி செய்யபட்டுள்ளது.
குற்றவாளிகளை கண்டறிய விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. முக்கிய சாட்சிகளாக இருக்கும் குடும்பத்தினருக்கு இந்த சூழ்நிலையில் அரசு வேலை வழங்குவது என்பது விசாரணைக்கு எந்த விதத்திலும் சரியாக இருக்காது.
எனவே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்திற்கு உடனடியாக இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடுத்தவரின் கோரிக்கை நியாயமானது.
இன்றைய வழக்கு விசாரணை இது குறித்தே இருப்பதால் , கரூர் செல்லும் முதல்வர் விஜய் அரசு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்.
பணம் வாங்கிட்டு வேலை கொடுத்த பொழுது TNPSC
தூங்கிட்டு இருந்ததா
இந்த ஆர்.எஸ்.பாரதி ஆண்ட கட்சியில் இருக்கும்வரை அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டேதான் இருப்பர் அது அவருடைய பிறவிக்குணம் யாராலும் மாற்றவே முடியாது
நீதிமன்றத்தில் அவர் சரியான அடி வாங்கியதும்தான் பின் அடங்கிவிடுவார் அதுவும் அவரது பிறவிக்குணம்
சரியாக சொன்நீர்
முதலில் கண்ணில் படாமல் போக்கு காட்டும் அணில் பாலாஜிக்கு செருப்படி கொடுத்தாலே போதும். இவர்கள் அனைவரும் மண்ணைக் கவ்வுவது உறுதி.
அடுத்த செருப்படி வாங்க தயாராகும் திமுகமேலும்
-
மஸ்ட் கல் குவாரிக்கு எதிர்ப்பு நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 11 க்குரியது
-
ராமநாதபுரம் ஏரியாவில் சேர்த்து கொள்ளவும் –––––– ராமேஸ்வரம் கோயில் வீதியில் பக்தர்கள் கூடுதல் ஓய்வு கூடம் அமைக்கப்படுமா
-
நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
-
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு உதவ சிறப்பு கட்டுப்பாட்டு அறை
-
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரேஷனில் கைரேகை பதிவு கட்டாயம்