நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் துவங்கி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தனபூஜை, முதல் கால யாக பூஜைகள், மூல மந்திரங்கள், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கோபூஜை, லட்சுமி பூஜை, இரண்டாம் கால யாகபூஜை, பூர்ணாஹூதி, கலச புறப்பாடுக்கு பிறகு சிவாச்சாரியார்கள் தலைமையில் கும்பநீர் ஊற்றப்பட்டது.

நிறைகுளத்து அய்யனாருக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்துாரை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.

Advertisement