த.வெ.க.,வுடன் தொடர்ந்து பயணிப்போம்: அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்

4

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வி.சி.க.,வைச் சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு நேற்று அளித்த பேட்டி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் குற்றங்களே இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். இன்னும் ஓராண் டில் மனைப்பட்டா இல்லா தவர்களே இல்லை என்ற நிலையும், ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுதும் வீட்டுமனைப் பட்டா இல்லாமல் எவரும் இல்லை என்ற இலக்கும் எட்டப்படும். பெண்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும். கல்வராயன் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கட்டாயம் உயர்த்தப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு எப்போதும் எங்கள் முழு ஆதரவு உண்டு. அங்கும், இங்குமாக தாவாமல், ஆழமாக காலுான்ற த.வெ.க.,வுடன் எங்கள் பயணம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement