தேர்தலின் போது ஐ.டி., பிரிவு சரியாக செயல்படவில்லை: அதிமுக நிர்வாகிகளிடம் பழனிசாமி ஆவேசம்
சென்னை: 'அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு உட்பட சார்பு அணி நிர்வாகிகள், முறையாக தேர்தல் பணிகளை செய்யவில்லை' என, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளுடன், பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்ட நிகழ்வு குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: பிற மாவட்டங்களை விட, வட மாவட்டங்களில் தான், அ.தி.மு.க., அதிக இடங்களை கைப்பற்றியது. இதற்கு, பா.ம.க., கூட்டணி முக்கிய காரணம்.
எனினும், சமூக வலைதளங்களில், தி.மு.க., - த.வெ.க., பிரசாரம் செய்த அளவுக்கு, அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு செயல்படவில்லை. அதனால் தான், நம்மால் முழுமையான வெற்றியை பெற முடியவில்லை என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட பழனிசாமி பேசியதாவது: புதிய கட்சிகளின் டிஜிட்டல் வேகத்திற்கு இணையாக, அ.தி.மு.க., ஐ.டி., பிரிவினர் செயல்படவில்லை. ஏ.ஐ., தொழில்நுட்பங்களை பயன்படுத்தவில்லை.
தேர்தல் பிரசாரத்தின்போது இணையதள பிரசாரம் செய்ய தவறி விட்டது. ஐ.டி., பிரிவு மட்டுமல்ல, எல்லா சார்பு அணிகளும் சரியாக செயல்படவில்லை. இந்த அணிகளுக்கு சரியான ஆட்களை நியமனம் செய்யும்படி தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தேன்.
மாவட்ட நிர்வாகிகள் தான், சார்பு அணிகளுக்கு நிர்வாகிகளை நியமித்தனர். அவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், யார் காரணம். நீங்கள் சரியான ஆட்களை நியமித்து இருந்தால், எல்லா அணிகளும் செயல்பட்டிருக்கும். ஐ.டி., அணியில் தான் என் மகன் மிதுன் பணியாற்றினார்.
எனவே, நீங்கள் செய்த தவறை சரி செய்யுங்கள். ஐ.டி., அணிக்கு இனிமேலாவது ஏ.ஐ., உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் தெரிந்தவர்களை நியமியுங்கள். இவ்வாறு அவர் பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், உட்கட்சி பிரச்னையால் சண்முகம், வேலுமணி உள்ளிட்டோரை கட்சி பொறுப்பில் இருந்து பழனிசாமி நீக்கிய போது, 'இனி இளைஞர்களின் காலம். நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது' என, முக்கிய பதவிகளில் இளைஞர்களை நியமிக்க வேண்டும் என, ஐ.டி., பிரிவு மாநில செயலர் ராஜ்சத்யன் வலியுறுத்தினார்.
அடுத்த சில நாட்களிலேயே வேலுமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் பதவிகள் கொடுத்தாலும், புகைச்சல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 'தன் மீதான குறையை மறைக்க கட்சியின் ஒட்டுமொத்த அணிகளையும் பழனிசாமி குறைகூறி வருகிறார்' என, ஐ.டி., பிரிவு தரப்பில் பதிலுக்கு குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு பிறகு கட்சியை வழிநடத்த, அண்ணாமலையை கட்சிக்கு கொண்டு வர இப்போதே முயற்சிக்க வேண்டும் என்றும், ஐ.டி., பிரிவு இளைஞர்கள் வலியுறுத்தினர். இதனாலும் கோபமாகியுள்ள பழனிசாமி, ஐ.டி., பிரிவு குறித்து விமர்சித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்றைய கூட்டத்தில், அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி மரகதம் வெற்றிவேல், பர்கூர் கோவிந்தராசன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆனால், ஓசூர் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ண ரெட்டி, பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில், ஓசூரில் த.வெ.க.,வை சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் பங்கேற்ற நிகழ்ச்சியில், பாலகிருஷ்ணா ரெட்டி கலந்து கொண்டார்.
@block_B@
சட்டசபை தேர்தலுக்கு பின், தனக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கி செயல்பட்ட, மாவட்ட செயலர்களின் பதவியை பழனிசாமி பறித்திருந்தார். மீண்டும் அந்த பொறுப்பு வழங்கப்படாத விரக்தியில், எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து வருகின்றனர். அதேபோல, மா.செ., பதவி வழங்கும் வரை, வேறு பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர், பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
இந்நிலையில், அதிருப்தியில் இருந்தாலும் வேறு கட்சிக்கு செல்லாமல் இருக்கும், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், பாலகிருஷ்ண ரெட்டி, அருண்மொழிதேவன், சுகுமார் உள்ளிட்டோருக்கு, மீண்டும் மா.செ., பதவியை வழங்க வேண்டும் என, பழனிசாமியிடம் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். எனவே, அவர்களுக்கு பழைய பதவிகளை வழங்குவது பற்றி, பழனிசாமி ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இது, புதிதாக மா.செ., பதவியை பெற்றவர்களை அதிர வைத்துள்ளது.block_B
ஆ தீ மு கா ரீல்ஸ் சுத்தல. அங்க ரீல் சுத்தியும் எடுபடல. அது தான் வித்தியாசம்.
சூப்பர் கமெண்ட்! ரீல் சுத்தியும் காரியம் ஆகல!
கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்...
அதிமுகவை ஒழித்துக்கட்டிய அண்ணண் எடப்பாடி பழனிசாமி நீடூழிவாழ்க.
எந்தெந்த பிரிவுகள் சரியாக செயல் பட்டது இவிக மட்டும் காலம் வாரிட்டாக . ஒர்ருக்கு இளச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி
இப்பொது கூட மாவட்ட கருத்து கணிப்பு கூட்டம் என்னும் பேரில் ஒரே படத்தையே பல மாவட்ட மீட்டிங்களில் நடந்த மாரி Twitter ல் போடுகின்றனர். பட்டும் திருந்த வில்லை
ஒரு மதுரை கார வாரிசு IT அணியில் இருக்கிறார் அவரின் tweet களே இவர்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதற்கு சான்று . நிர்மல் குமாரை துரத்தி விட்டனர் அவர் எதிரியிடம் போன் எதிரியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று இப்பொது மந்திரி ஆகி விட்டார். தனக்கும் வராது யாரை உபயோகப்படுத்த வேண்டும் என்ற அறிவு கூட இல்லை
முதலில் எ ப சா பதவி விலகட்டும். எதேச்சாதிகார துஷ்பிரயோகம் கட்சியை அழித்து விட்டது.
குரங்கு கையில் கொடுத்த தீப்பந்தத்தை அது வனத்தை எரித்து நாசமாக்கியதை போல அதிமுக என்கிற ஆலமரத்தை கொடுத்துவிட்டதன் பலனை இப்போது ஒட்டுமொத்த கட்சியினரும் நொந்துகொள்கின்றார்கள். பிடிக்காதவர்கள் வேறு கட்சிக்கு சென்றுவிட்டார்கள். பழனிச்சாமியால் திட்டமிட்டு விரட்டியடிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏராளம். தேர்தலில் திமுகவின் முக்கிய புள்ளிகளை எதிர்க்க டம்மி வேட்பாளர்களை நியமித்து அப்போதே திமுகவின் உளவுத்துறை தலைவராக தொடர்ந்து செயல்பட்டார். எதிர்க்கட்சி அந்தஸ்தை அப்படியே தூக்கி போட்டுவிட்டு திமுவுக்கு எதிராக செயல்பட மறுத்துவிட்ட்டார். பிறகு எப்படி மக்களின் நம்பிக்கைக்கு கட்சி உருவாகும். எவ்வளவு ஊழல் செய்தார்கள் திமுகவினர் அவர்கள் ஆட்சியில்.. ஏதேனும் ஒரு போராட்டம் நடத்தி மக்களின் நம்பிக்கையை பெற முயற்சித்தாரா சொல்லுங்களேன் பாப்போம்.
மதுரை மாநகராட்சி ஊழலில் நாறியபோது இவர் என்ன செய்தார்? ஹ்ம்ம் ஒண்ணுமே செய்யல. சென்னை மாநகராட்சியில் கக்கூஸ் ஊழலில் மாநிலமே நாறியபோது இவர் என்னதான் செய்தார். டம்மியாக ஒரு அறிக்கையோடு நிறுத்திக்கொண்டார். மணல் மற்றும் கனிமவள கொள்ளையால் மாநிலமே வீணாகிக்கொண்டிருத்தந்தை பற்றி வாய் திறந்தாரா? பிறகு எப்படி மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கு உயரும்.? ஒண்ணே ஒன்னு செய்தார்... தனக்கு எதிரான விமர்சித்த பாஜகவை சேர்ந்த அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்க செய்து கூட்டணி அமைத்தார். இதை தனது அரசியல் சாதனையாக கருதி தன்னை பெரிய தலைவராக காட்டிக்கொண்டார். அதன் பலன்தான் இன்றைக்கு மீண்டும் தோல்வியை தூக்கிகொண்டு சொந்த கட்சியை அழித்துக்கொண்டுள்ளார்.
கொடநாடு கொலைவழக்கினை திமுக இதுநாள்வரை தூசி தட்டியிருக்குமா? இல்லையே.. எப்படி செய்வார்கள். அதற்குத்தான் சொன்னதையெல்லாம் செய்து திமுகவை குளிர்வித்து தப்பித்துக்கொண்டார். அதற்கு பதிலாக தான் அதிமுகவின் பரம எதிரியாக கருதும் திமுகவின் ஆதாராவுடன் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டார் வெட்கமே இல்லாமல் . ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்.. திமுகவின் உளவாளியாகவே மாறிவிட்டார் பழனிச்சாமி
Sekar your rcords are big challenge to ctr Nirmal kumar and senthil balaji on changing party support. Aiadmk cadres will take care of party. EPS undisputed leader of aiadmk.
இவர் எதிலும் எப்போதும் சரியாகச் செயல்படவில்லை! அதனால் மக்கள் கடந்த தேர்தலில் தகுந்த நடவடிக்கை எடுத்து இவர் ஆட்சியையே ஒதுக்கி வைத்து விட்டார்கள்! இப்போது ஐடி விங் செயல் படாததால் தோல்வி என்று உருட்டுகிறார்! திருந்தாத, திருந்த தெரியாத, திருத்த முடியாத கேஸ்! அவ்வளவுதான் சொல்ல முடியும்! வாழ்க அதிமுக மற்றும் அதன் தொண்டர்கள்!
You take care of your party. Aiadmk cadres are with EPS. EPS toured more than 200 constituencies. Now he is conducting regular meetings with all district secretaries. He is the only active political leader in Tamilnadu. At the same time aiadmk cadres are very active with party.மேலும்
-
மஸ்ட் கல் குவாரிக்கு எதிர்ப்பு நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 11 க்குரியது
-
ராமநாதபுரம் ஏரியாவில் சேர்த்து கொள்ளவும் –––––– ராமேஸ்வரம் கோயில் வீதியில் பக்தர்கள் கூடுதல் ஓய்வு கூடம் அமைக்கப்படுமா
-
நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
-
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு உதவ சிறப்பு கட்டுப்பாட்டு அறை
-
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரேஷனில் கைரேகை பதிவு கட்டாயம்