வெண்டையில் சாம்பல் நோய் தோட்டக்கலை ஆலோசனை

காரைக்குடி, ஜூலை 11-

சிவகங்கை மாவட்டத்தில் வெண்டையில் சாம்பல் நோயை தடுக்க, விவசாயிகளுக்கு தோட்டக்கலை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.

சாக்கோட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் நந்தினி கூறியுள்ளதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் 200 ஏக்கருக்கும் அதிகமாக வெண்டை சாகுபடி நடந்து வருகிறது. காய்கறி பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் அதிகம் பாதிப்படைவது வெண்டை பயிராகும். அதில், வெண்டையில் முக்கிய பாதிப்பாக இருப்பது சாம்பல் நோய் பாதிப்பாகும். இந்நோயானது இலையின் இரண்டு புறமும் சாம்பல் கலந்த வெள்ளை நிற பொடி போன்ற வளர்ச்சி இதன் நோய் அறிகுறியாக. இதனை கட்டுப்படுத்த செயற்கைத் தந்தகம் 0.25 சதவீதம் அல்லது டைனோகேப் 0.1 மூன்றிலிருந்து நான்கு முறை 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.

Advertisement