ஹைட்ரஜனில் இயங்கும் முதலாவது ரயில்: ஜூலை 17ல் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி
புதுடில்லி: ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் முதலாவது ரயில் சேவையை ஜூலை 17ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மக்களுக்கு சேவை அளித்து வரும் ரயில்வே துறையை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மின் ரயில்கள், மெட்ரோ, வந்தே பாரத் போன்ற ரயில்கள் பயன்பாட்டில் இருக்கிறது. புல்லட் ரயிலுக்கான பணிகளும் செயல்பாட்டில் உள்ளது.
இந் நிலையில், நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜூலை 17ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகம் ஆகிறது.
பெட்ரோல், டீசல், மின்சாரம் இல்லாமல் ஹைட்ரஜன் எரிபொருளை மட்டுமே கொண்டு, மணிக்கு 140 கிமீ வேகத்தில் இந்த ரயில் செல்லும். ரயிலின் குதிரைத் திறன் 1200 ஆகும்.
சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட ரயில், ஹரியானாவில் முதல் கட்டமாக 89 கிமீ நீளமுள்ள ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. தினமும் இந்த ரயில் இயக்கப்படும். ஒரு டிக்கெட் விலை ரூ.5 முதல் ரூ.25 வரை இருக்கும்.
ஜூலை 17ம் தேதி ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
அதெல்லாம் சரி, அதென்ன டிக்கட் விலை 5 ரூபாய் .பிளாட்பாரம் டிக்கெட்டே 10 ரூபாய்.மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி