'இ - 20' பெட்ரோலால் வாகனங்களுக்கு பாதிப்பு இல்லை!: மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம்
புதுடில்லி: 'இ - 20 பெட்ரோல், வாகனங்களில் எரிபொருள் சிக்கனத்தை, 35 சதவீதம் வரை குறைத்தாலும், சிறந்த பிக்கப், சீரான வேகம் அதிகரிப்பு, துாய்மையான இன்ஜின் செயல்பாடு உள்ளிட்ட பல நன்மைகளை தரும். இது வாகனங்களில் எவ்வித கோளாறுகளையும் ஏற்படுத்தாது' என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைப்பதையும் நோக்கமாக கொண்டு, கடந்த ஏப்., 1 முதல் நாடு முழுதும், 'இ - 20' பெட்ரோல், அதாவது 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.
எத்தனால் கலப்பு அதிகரிப்பதால், பழைய வாகனங்களின் இன்ஜின்கள் பாதிக்கப்படலாம் என்றும் வாகனங்களின், 'மைலேஜ்' எனப்படும், எரிபொருள் சிக்கனம் குறையலாம் என்றும், 'இ - 20' பெட்ரோல் மீது விமர்சனங்கள் எழுந்தன.
சிக்கனம்
இது குறித்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
'இ - 10' பெட்ரோலைவிட, 'இ - 20' துாய்மையான, உயர்தரம் மற்றும் அதிக திறன் உடைய எரிபொருள். பல ஆண்டுகால அறிவியல் சோதனைகள், வாகன உற்பத்தியாளர்கள் உடனான ஆலோசனைகள் மற்றும் உள்நாட்டு எத்தனால் உற்பத்தியின் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு பின்னரே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுதும் அறிமுகம் செய்வதற்கு முன், இன்ஜின் ஆயுள், எரிபொருள் அமைப்புகளின் இணக்கத்தன்மை, அரிப்பை தடுக்கும் திறன், வாகனத்தை ஓட்டும் வசதி ஆகிய அம்சங்களில், 'இ - 20' பெட்ரோல் விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 'இ - 20' பெட்ரோல், சில வாகனங்களில் எரிபொருள் சிக்கனத்தை 35 சதவீதம் வரை குறைக்கக்கூடும்.
சரிபார்ப்பு
அதேசமயம், அதிக ஆக்டேன் அளவு, இன்ஜின்களில் ஏற்படும் தேவையற்ற சத்தம் மற்றும் அதிர்வுகளை குறைக்கும். சிறந்த பிக்கப், சீரான வேகம் அதிகரிப்பு, துாய்மையான இன்ஜின் செயல்பாடு மற்றும் குறைவான கார்பன் உமிழ்வு போன்ற மிக முக்கிய நன்மைகளை இது வழங்கும்.
இந்த பெட்ரோலை பயன்படுத்துவதால், வாகனத்தின் பாகங்களின் ஆயுட்காலம் குறைதல், அசாதாரண தேய்மானம் போன்ற எந்த பாதிப்புகளும் இல்லை என பிரபல வாகன உற்பத்தியாளர்களே சான்றளித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் நோக்கமே, பெட்ரோல் நிலையங்களில், 'இ - 20' பெட்ரோலின் விலையை குறைப்பதைவிட, இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை இந்தியா சார்ந்திருப்பதை குறைப்பதும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுமே ஆகும்.
'இ - 20' எரிபொருள் நாடு தழுவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன், வாகன உற்பத்தியாளர்கள், சோதனை முகமைகள், எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளால் சரிபார்க்கப்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர்கள், 'இ - 20' தொடர்பான தவறான தகவல்களால் குழப்ப மடைய வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Let us not get into the trustworthiness of this so called report, which is just the political pitch and have no science in it. This is market economy, consumers should have choice, you give all types of petrol from 100% to 20% petrol let the consumers choose what they want to use. La poll by various media in India shows unanimously of more than 95 percent people wanted Choice of 100% petrol.
அதை நீ வேண்டுமானால் வீட்டில் வைத்து கொள் ... மைலேஜ் அதிகம் ஆகும் மற்றும் உதிரி பாகங்கள் சேதாரம் ஆகாது என்று ஹார்டீப் பூரி , கட்கரி கையெழுத்து போடுவார்களா ?
இ20 ஒரு லிட்டர் 82 ரூபாயாம் ? எத்தனால் கலந்தும் விலை குறைய இல்லை ...
என்னை சமச்சீர் என்று கூறும் தாங்கள் ஹார்வர்டில் கல்வி பட்டம் பெற்றிரா ?
சமச்சீர் நாதன்சுவாமி ஏற்கனவே மத்திய அரசு E20 பற்றிய நிறைய பரிசோதனைகள் பலவற்றை செய்து இப்போது சான்றிதழ் அளித்துள்ளது.
அப்போ ஒன்னு பண்ணலாம் ...மத்திய அரசு அமைச்சககங்கள் வாகனங்களை கொண்டு இ 20 பரிசோதனை செய்யவும் பிறகு அதன் முடிவை மக்கள் கிட்ட கூறவும் .நல்லது என்றால் மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் ...பொதுமக்கள் வாகனங்களை சோதிக்காதீர்கள் ...
சமச்சீர் அறிவாலய அடிமையான உனக்கு அம்புட்டு அறிவா ஏலேய் கீழே உள்ள முதல் comment ஐ படித்துப் பார்த்து தெளிவு பெறு
சந்தேகம் வேண்டாம் அறிவாளய அடிமையே.....
வேறு யாரும் இப்படி பேசமாட்டார்கள்......
i am using jio petrol for my 2009 model car no issues running smoothly
நல்ல விசயம்....கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது..... அதே போல் மாநிலங்களும் தங்கள் கடைமைகளை சரியாக செய்யவேண்டும்.....
எந்த எந்த இடங்களில் போக்குவரத்து சிரமம் உள்ளது டிராபிக் ஜாம் ஏற்படுகிறது...... எந்தெந்த நேரங்களில் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.....
தேவைப்பட்டால் கூடுதலாக போக்குவரத்து போலிசார் பணியமர்த்த வேண்டும்....
இந்த டிராபிக் ஜாமில் மட்டும் கிட்டத்தட்ட 5 முதல் 6 சதவீதம் எரிபொருள் மிச்சப்படுத்தலாம் என ஒரு ஆய்வு கூறுகிறது.....
மாநிலங்களும் தங்கள் உடைமைகளை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்....
பழைய வாகனங்களில் E20 எரிபொருள், அச்சப்படுவதை விட அதன் உண்மைகள் என்ன? ARAI மற்றும் IIP யின் நீடித்த உழைப்புச் சோதனைகள் (1,00,000 கி.மீ. வரை) உறுதிப்படுத்துகின்றன. இன்ஜினுக்கு எந்தச் சேதமும் இல்லை, சக்தி இழப்பு இல்லை, உலோக அரிப்பு அறவே இல்லை. ரப்பர் சீலில் சிறிய தேய்மானம் மட்டுமே உள்ளது அதை ₹10 முதல் 50 செலவில் எளிதாக மாற்றிக்கொள்ளலாம். அரசு இப்போது E20 இணக்கத்தன்மை சோதனைகளை இலவசமாக்கியுள்ளது! E20 எரிசக்திப் பாதுகாப்பையும் ஆத்மநிர்பர் பாரதத்தையும் மேம்படுத்துகிறது.
ஏப்ரல் 1, 2025 முதல், இந்தியா முழுவதும் E20 இயல்பான பெட்ரோலாக இருந்து வருகிறது. இன்று, தினமும் சுமார் 25 முதல் 30 கோடி வரையிலான பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் வாகனங்கள் இந்தக் கலவையில் இயங்குகின்றன. இதற்கான மிகப்பெரிய நடைமுறைச் சான்று மாருதி சுசுகி நிறுவனத்திடமிருந்து வருகிறது. இந்நிறுவனம் 2025 to 26 நிதியாண்டில் 2.84 கோடி வாகனங்களுக்குச் சேவை வழங்கியுள்ளது. தனது சேவை வலையமைப்பு முழுவதும் E20 தொடர்பான பரவலான எஞ்சின் அல்லது எரிபொருள் அமைப்புச் செயலிழப்புகள் எதையும் தாங்கள் காணவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய எரிபொருள் மாற்றங்களில் ஒன்றான இது, இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது, கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கிறது, மற்றும் உள்நாட்டு எத்தனால் உற்பத்தியை ஆதரிக்கிறது.
எனவே இந்தியாவிற்கு எதிரான இதுபோன்ற. அச்சமூட்டும் வதந்திகளுக்கு நாம் பலியாகிவிடக் கூடாது.
Very good one Subbu Keep it up please.....
20% விலை குறைப்பையும் அமலாக்க வேண்டும்மேலும்
-
மஹாராஷ்டிராவில் மகளிர் உரிமை திட்டத்தில் 92 லட்சம் பெண்கள் நீக்கம்
-
ஆடி மாத பிறப்பையொட்டி மங்கல கயிறு உற்பத்தி தீவிரம்
-
கலப்பு மலைகாய்கறி விவசாயத்தில் சிறு விவசாயிகள் அசத்தல்! மழைகாலத்தில் மண் வளத்தை பாதுகாப்பத்தில் களம்
-
சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர்கள் கோரிக்கை
-
ஏரிகளில் நடைபெறும் மெகா மண் திருட்டு :விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கவனிப்பாரா?
-
கிள்ளை பட்டாசு வெடி விபத்து: சிகிச்சை பலனின்றி பெண் இறப்பு