ஒரு டன் 'கேரி பேக்' பறிமுதல்

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டல உதவி கமிஷனர் கணேஷ் குமார், தலைமையில் சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் நேற்று அவிநாசி ரோட்டில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், 20 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் இரண்டு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதனால், அந்த கடைகளில் இருந்து ஒரு டன் எடையுள்ள பாலிதீன் கேரி பேக், ஒன் யூஸ் டம்ளர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement