வாளையார் சோதனைச்சாவடியில் 700 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல்
க.க.சாவடி: க.க.சாவடி அடுத்து வாளையார் சோதனை சாவடியில் நேற்று போலீஸ் எஸ். எஸ்.ஐ., சுரேஷ் உள்பட ஒன்பது பேர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவை நோக்கி வந்த கேரள அரசு பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட ஒருவரை விசாரித்தனர்.
அவர் கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த முஹமது, 65, என்பதும், நகை பட்டறை வைத்திருப்பதும் தெரிந்தது. அவரிடமிருந்த கவரில், பழைய நகைகளை உருக்கி செய்யப்பட்ட, 700 கிராம் எடையுள்ள மூன்று தங்க கட்டிகள், இரு வளையல்கள் உரிய ஆவணங்களின்றி இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து முஹமதுவுடன், வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் சத்யராஜிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செவிலியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
-
பயிர்க்கடன் தள்ளுபடி பெறும் விவசாயிகள் பட்டியல் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஆய்வு
-
அரசு மருத்துவமனையில் இயற்கை மருத்துவ பிரிவு கட்டடம் துவக்கம்
-
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கார் மீது கல்வீச்சு ‘மாஜி’ அமைச்சர் மீது புகார்: செஞ்சி அருகே பதற்றம்
-
முந்திரி பண்ணைக்கு நடமாடும் வாகனம் வழங்கல்
-
வானில் மழையென பொழிந்த மாங்கனிகள் விதைகளாக விழுந்து விருட்சமாகிறது காரைக்கால் நகராட்சியின் அசத்தல் முயற்சி
Advertisement
Advertisement