சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: கணக்கில் வராத ரூ.35,730 பறிமுதல்
நமது நிருபர்
தேனி மாவட்டம் போடிமெட்டு, முந்தல், குமுளி போலீஸ் சோதனை சாவடிகளில் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.35,730ஐ பறிமுதல் செய்தனர்.
தமிழக, கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில்போடிமெட்டு, முந்தல், கம்பமெட்டு, குமுளியில் போலீஸ் சோதனை சாவடிகள் உள்ளன. இந்த வழியாக உரிய ஆவணம் இன்றி கனிமம், கால்நடைகள்கொண்டுசெல்லும் வாகனங்களை போலீசார் சோதனை செய்யாமல் பணம் வசூல் செய்து அனுப்புவதாக தொடர்ந்துபுகார் எழுந்தது.
நேற்று காலை 6:30 மணிக்கு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜ் தலைமையில் தேனி இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி போடிமெட்டு சோதனை சாவடியிலும், முந்தல் சோதனை சாவடியில் திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் ரூபா சீதாராணி முன்னிலையில் எஸ்.ஐ.,க்கள் சோதனை நடத்தினர்.
இரு பகுதியில் இருந்து வந்து செல்லும் வாகனங்கள் குறித்து பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். அங்குள்ள இருக்கைகள், டேபிள், அறையில் இருந்த பைகளில் சோதனை செய்தனர்.போடிமெட்டு சோதனை சாவடியில் ரூ. 5790, முந்தல் சோதனை சாவடியில் ரூ.3500 என கணக்கில் வராத ரூ.9290ஐ பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கூடலுார் குமுளி அவுட் போலீஸ் ஸ்டேஷனில் கேரளாவில் இருந்துதமிழகத்திற்கு வரும்வாகனங்களும் சோதனை செய்யப்படும். நேற்று காலை 6:00மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் ஸ்டேஷனில் கதவுகளை மூடி சோதனை மேற்கொள்ளப் பட்டது. கடந்து செல்லும் வாகனங்களின்விபரங்கள் அடங்கிய பதிவேடுகள் ஆய்வுசெய்யப்பட்டது.
காலை 11:45மணி வரை நடந்த சோதனையில்கணக்கில்வராத ரூ.26,440 ஐ பறிமுதல்செய்தனர். பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ., அய்யப்பன், ஏட்டுகள் அருள்ராஜ், பாஸ்கரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
நேற்று கரூரில் பேசும் போது திமுகவின் ஐந்து வருட ஆட்சியில் நடந்த ஊழல்கள் தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கிறது என்றும் தனது ஆட்சியில் ஊழலே இல்லை என்றும் பெருமையாக கூறி இருக்கிறார். அவர் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளை பார்ப்பதில்லை என இதிலிருந்து தெரிகிறது.
அனு தினமும் அரசு ஊழியர்களின் ஊழல் நடவடிக்கை செய்திகளை பத்திரிகையில் படித்தவர்களும் தொலைக்காட்சியில் பார்த்தவர்களும் தமிழகத்தில் ஊழல் எள்ளளவும் குறையவில்லை அல்லது குறைய வாய்ப்பில்லை என புரிந்து கொண்டிருப்பார்கள்.
இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுகவில் ஊழல் செய்த பலரையும் தன் கட்சியில் சேர்த்ததன் மூலம் அந்த இரண்டு கட்சிகளை இவரே தூய்மையாக்கி விட்டார்.
எனவே எப்போது இடைத் தேர்தல் நடந்தாலும் தவெகவை விட இரண்டு திராவிட கட்சிகளே பரவாயில்லை என் மக்கள் மனம் மாறி அவர்களுக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு கிடைக்க ஒரு சந்தர்ப்பத்தை இவரே உருவாக்கி தந்துள்ளார்.
இம்மாதிரி திடீர் சோதனைகள் ஒவ்வொரு மாநில சோதனை சாவடிகளில் அடிக்கடி நிகழவேண்டிய ஒன்று. அங்குள்ள பணியாளர்கள் மீதி தொகையைக் கொடுக்காமல் மேலும் லஞ்சம் கொடுத்தால் தான் மாநிலத்திற்கும் நுழைய அனுமதிகின்றனர்,
இல்லாவிடில் மணிக்கணக்காக க்யூவில் நின்று அவதிப்படவேண்டியது தான். லஞ்சப்பேய்கள், லஞ்சப்பிச்சைக்காரர்கள் வாழும் லஞ்சத் தமிழகம்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத ஓட்டை சட்டங்கள்