அதிக விலைக்கு மது விற்றவர் கைது

குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தாமரைசெல்வன், எஸ்.ஐ.,க்கள் மலர்விழி, தமிழ்குமரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, ராஜம் தியேட்டர் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த, 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், தனியார் ஓட்டல் மேலாளர் கணேசன், 38, கைது செய்தனர்.

Advertisement