அலுவலகங்களில் ஊழல் தடுப்பு சோதனை; ஒரு வாரத்தில் ரூ.22.33 லட்சம் பறிமுதல்
சென்னை: அரசு அலுவலகங்களில் நடந்த ஊழல் தடுப்பு சோதனையில், ஒரு வாரத்தில், 22.33 லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
லஞ்சம்
அதன்படி, கிருஷ்ணகிரி, திருவள்ளுர், தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தஞ்சாவூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், 11 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் கணக்கில் வராத, 12.46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், மாநில எல்லைகளில் நடத்திய சோதனையில், 9.87 லட்சம் ரூபாய் என, மொத்தம், 22.33 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
மேலும், 7ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில், கட்டட வரைபட அனுமதிக்கு, 15,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, இளநிலை உதவியாளர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். அதே நாளில், திருப்பூர் மாவட்டத்தில் பட்டா மாற்றம் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார். சென்னை வேளச்சேரி காவலர் அழகுராஜா, இரு சக்கர வாகனத்தின் உரிமத்தை திருப்பி தர, 1,000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், 9ம் தேதி கைது செய்யப்பட்டார்.
கைது
அதே நாளில், சிவகங்கை மாவட்டத்தில், திருமணம் செய்து வைக்க, திருப்புவனம் போலீஸ் எஸ்.ஐ., 3,000 ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டார். மேலும், அதே மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்ற 3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, கிராம உதவியாளர் கணேசன் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய, 2,500 ரூபாய் லஞ்சம் பெற்ற தாலுகா அலுவலக உதவியாளர் ஆரோன், 10ம் தேதி கைது செய்யப்பட்டார். அதே நாளில் தென்காசி மாவட்டத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய நில அளவையர் சங்கர், 10,000 ரூபாய் லஞ்சம் பெற்றபோது சிக்கினார்.
மேலும், லஞ்சம் பெற்ற தாசில்தார் ஆதிபகவான், ஓட்டுனர் கந்தசாமி ஆகியோருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து, விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிஸ்கட் ஊழல். அதிகாரிகள் பெயரை வெளியிட முடியுமா??? இருந்தாதான் வெளியிடறதுக்கு
இந்த செய்தி வந்து ஒரு வாரம் கழித்து பாருங்கள்! ரூ 30 லட்சம் ஊழல் கண்டு பிடிக்க படும்! பிரிக்க முடியாது அதிகாரமும் ஊழலும்! பிகில் முதல்வர் அண்ணன் புரிந்து கொள்ள வேண்டும்!
looks like these people dont have gpay account with real estates, supermarkets, etc
தமிழகத்தில் முதலில் ஒழிக்கப்படவேண்டியது ஊழல். ஊழலை ஆளும் கட்சியினரே செய்தால் கூட, அவர் மீது நடவடிக்கை எடுத்தால் அவர் ஆதரவு போய்விடுமே என்று யோசிக்காமல் அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் ஊழல் முற்றிலும் ஒழிந்தால், தமிகாகத்தின் பாதி பிரச்சினை தீர்ந்தமாதிரிதான். பிறகு, போதைப்பொருள் புழக்கம் ஒழிக்கப்படவேண்டும். அதன்பிறகு பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை குற்றங்கள் முழுமையாக தடுத்துநிறுத்தப்படவேண்டும். பிறகு என்ன, தமிழகம் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் என்று நாம் பெருமை பேசி திரியலாம்.
அவ்வளவுதானா. நம்பிட்டோம். -ஈ-
திராவிஷ ரவுடிகள் மற்றும் அவர்களின் பினாமிகளின் சொத்துக்கள் மற்றும் அனைத்து முதலீடுகளையும் சோதனையிட வேண்டும். அவற்றுக்குக்கான தகுந்த வருமான ஆதாரத்தை தெரிவிக்காத பட்சத்தில் அச்சொத்துக்களை முடக்கி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு பதிவு செய்து தண்டனை வாங்கித் தர வேண்டும்.
இந்த செய்தியைக் கேட்கும் பொழுது மனதுக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது இது மட்டும் போதாது ஒவ்வொரு துறையிலும் உள்ள நபர்கள் வாங்கிய ரூபாய் மற்றும் வழங்கப்படும் தண்டனை விவரங்களையும் இணையதளத்தில் பதிவு செய்து அனைவரும் சென்று சேரும்படி செய்ய வேண்டும் இது ஒரு முக்கியமான விழிப்புணர்வு
22.23 லட்சம் ஒரு வாரத்திலென்பது ஒரு மிகச்சிறிய தொகை, இந்தத்தொகை ஒரு மணிநேரத்திலேயே கைமாறும் லஞ்சம். தீவிர கண்காணிப்பும் வேட்டையும் நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும். லஞ்சம் என்பது கோடி கோடியாக கைமாறும் தளம் தமிழகம்.