குட்கா விற்பனை பெண் கைது
கடலுார்: பெட்டிக் கடையில் குட்கா பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் துறைமுகம் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சோனங்குப்பம் ஆறுமுகம் மனைவி குப்பம்மாள்,65; என்பவரின் பெட்டிக் கடையில் சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட 105 பாக்கெட் குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து குப்பம்மாளை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement