ஜல்லி, 'எம் - சாண்ட்' விற்பனை 'ஆன்லைன்' முறைக்கு மாறுமா? முறைகேடுகளை தடுக்க யோசனை
சென்னை: கட்டுமான பணிகளுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள கருங்கல் ஜல்லி, 'எம் - சாண்ட்' ஆகியவற்றின் விற்பனையை முழுமையாக, 'ஆன்லைன்' முறைக்கு மாற்ற, கனிமவளத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட இடங்களில், கருங்கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்த குவாரிகளில் கிடைக்கும் கருங்கற்களை உடைக்கும் கிரஷர்கள், 3,000 எண்ணிக்கையில் உள்ளன.
ஆற்று மணலுக்கு மாற்றாக, கருங்கற்களை ஆலைகளில் துகளாக்கி, 'எம் - சாண்ட்' தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 456 எம் - சாண்ட் ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நிறுவனங்களின் மொத்த உற்பத்தி திறனை விட, இரு மடங்கு அதிகமாக, எம் - சாண்ட் விற்பனை நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில், கிரஷர் உரிமையாளர்கள் கருங்கல் துகள்களை சலித்து, எம் - சாண்ட் என்று விற்பனை செய்கின்றனர்.
முறையாக கழுவி சுத்தப்படுத்தாத, இந்த எம் சாண்டை பயன்படுத்தினால், கட்டடங்களில் விரிசல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக கருங்கல் வெட்டி எடுக்கப்பட்டு, ஜல்லியாக விற்கப்படுகிறது.
இதில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டியது அவசியமாகிறது என, தமிழக மணல், எம் - சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகளில் முறைகேடுகளை தடுக்க, ஆன்லைன் முறை விற்பனை தொடங்கப்பட்டது. லாரி உரிமையாளர்கள், பொது மக்கள் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தினால் போதும்.
அவர்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மணல் வழங்கப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில், கருங்கல் ஜல்லி, எம் - சாண்ட் விற்பனையை, ஆன்லைன் முறைக்கு மாற்றலாம்.
எந்தெந்த குவாரிகள், யார்டுகளில், கருங்கல் ஜல்லி எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை, வெளிப்படையாக தெரிந்து, கட்டணம் செலுத்தி மக்கள் வாங்கிக் கொள்ளலாம். மக்கள் செலுத்தும் கட்டணம் அரசின் கணக்கிற்கு நேரடியாக வந்து சேரும்.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே, கருங்கல் வெட்டி எடுக்கப்படுகிறது என்பதை, அதிகாரிகள் தினசரி அடிப்படையில் உறுதி செய்ய முடியும்.
இதே போன்று, எம் - சாண்ட் தயாரிப்பாளர்களும் ஆன்லைன் முறைக்கு வந்து விட்டால், விற்பனை வெளிப்படையாகி விடும்.
இது குறித்த விரிவான அறிக்கையை, கனிமவளத் துறை அமைச்சர் பிரபுவிடம் அளித்து இருக்கிறோம். நல்ல முடிவு எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊழலை ஒழித்து விட்டோம் என்று எழுதுவதற்கு சரியாக இருக்கலாம். இதனால் எல்லாம் ஊழல் ஒழியாது. குறுக்கு வழியில் சம்பாதித்து செல்வம் குவித்தவர்களால் இந்த வருமானத்தை விட முடியாது. தவெக அமைச்சர்களே பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழகத்தில் பல அதிகாரிகள் ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சத்தில் ஒழியாது ஊழல். உத்திரபிரதேச முதல்வர் போல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகளை மோடியைப் போல கிடுக்கிப்பிடி போட்டு பிடிக்க வேண்டும். மோடி அவர்கள் குஜராத்தின் முதல்வாரனதும் அரசு ஊழியர்களின் வெறுப்பை பெற்றுக் கொண்டார். எனது உறவினர் அங்கு அரசாங்கத்தில் வேலை செய்கிறார். அவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கு மோடி பற்றி பேச்செடுத்தேன். உடனது எனது உறவினரின் மனைவி மோடி பற்றி வீட்டில் பேசக்கூடாது என்று தடை உள்ளது. அவருக்குப் பிடிக்காது என்று எனக்கு குறிப்பிட்டுச் சொன்னார். அப்போது அவர் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்த நாட்கள். காரணம் என்ன என்று கேட்டேன் ? நன்றாகத் தானே மாநிலத்தை முன்னேற்றுயுள்ளார். மாநிலத்தை முன்னேற்றுயுளார். ஆனால் அரசு ஊழியர்களை அலுவலகத்தை விட்டு நடுவில் வெளியேற விடாமல் தடுத்து விட்டார். அனேகமாக எல்லா அரசு ஊழியர்களும் இரண்டாவதாக ஏதாவது வியாபாரம் செய்வார்கள். அவர்களது அலுவலகத்துள்ளேயே அவர்களது வியாபாரம் கொடிகட்டி பறக்கும். இரண்டாவது சம்பாத்தியம் காலியாகி விட்ட கடுப்பு. ஊழல் பூஜ்ஜியம் லெவலுக்கு வந்து விட்டது. அது போல சுமார் பத்து வருடங்கள் தமிழகத்தில் முதல்வராக வருபவர் கடுமையாக இருந்தால் மட்டுமே தமிழகத்தில் கொஞ்சம் ஊழலை ஒழிக்கலாம்.
ஆன்லைன் முறை அரசு ஊழியர்களுக்கும் சரி , மக்களுக்கும் சரி பணியை இலகுவாக்கும் ...... விரைவில் வேலை முடியும் .... இருதரப்புக்கும் தலைவலி இல்லை .... ஆனால் முறைகேடு செய்ய வாய்ப்புக் குறைவு ..... தொழில்நுட்பத்திலும் முன்னேறிய மாநிலம் என்று பெருமை பட்டுக்கொண்டு தொழில்நுட்பத்தை முடக்கி வைத்தால் எப்படி ??