பாலம் கட்டுமான பணி ஆறு மாதமாக இழுபறி
உடுமலை: உடுமலை வி.ஜி.,ராவ் நகர் பாலம் கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.
உடுமலை திருப்பூர் ரோடு, வி.ஜி.,ராவ் நகர், யு.கே.சி.,நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கு செல்லும் பிரதான ரோட்டின் குறுக்கே ஓடை உள்ளது.
இந்த ஓடையை கடக்க, ஏற்கனவே இருந்த பாலம் அகற்றப்பட்டு, புதிய பாலம் கட்டுமான பணி துவங்கியது.
பழைய பாலம் அகற்றப்பட்ட நிலையில், புதிய பாலம் கட்டுமான பணி, ஆறு மாதமாக இழுபறியாகி வருகிறது. இதனால், இக்குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், மாணவர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
எனவே, பாலம் கட்டுமான பணியை உடனடியாக துவக்கி, விரைந்து முடிக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு
-
மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
-
பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து
-
போதை இல்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
சுற்றுச்சூழல் மாசு பதிவு சான்று விசைத்தறியாளருக்கு அறிவுரை
Advertisement
Advertisement