நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்

28



நமது நிருபர்




திருச்சி மாவட்டம், துறையூர், 22வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வீரம ணிகண்டன். நகராட்சி பூங்காவில், 300 சதுர அடியில் தனியறையும், 2,000 சதுர அடியில் உள்விளையாட்டு அரங்கும் சொந்த செலவில் கட்டியுள்ளார்.

இது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, நேற்று காலை, அந்த கட்டடங்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். வீரமணிகண்டன், ஆதரவாளர்களை பூங்காவுக்கு அனுப்பி, நகராட்சி அதிகாரிகளை பூங்காவை விட்டு வெளியே செல்ல முடியாமல், 'கேட்'டை மூடி ரகளையில் ஈடுபட்டார்.

துறையூர் போலீசார், கவுன்சிலருக்கு ஆதரவாக, அதிகாரிகளுடன் பஞ்சாயத்தில் ஈடுபட்டு, சீலை அகற்ற வைத்தனர்.கவுன்சிலருக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டு, அதிகாரிகளை மிரட்டியது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement