மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்

அவிநாசி: அவிநாசி அருகே வெள்ளியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள், கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பும்படிக்கின்றனர்.

நேற்று காலை வழக்கமாக பள்ளிக்கு சென்ற மூன்றுபேரும் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவிநாசி போலீசில் புகார் அளித்தனர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் மூன்று மாணவர்களும் ஊட்டி சென்றதை கண்டறிந்தனர். உடனே ஊட்டி சென்ற போலீசார் மூன்று பேரையும் மீட்டு, அவிநாசிக்கு அழைத்து வந்தனர். மாணவர்களுக்கு உரிய அறிவுரை கூறி அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement