பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து

மங்கலம்: மங்கலம், சோமனுார் ரோடு, செட்டிதோட்டத்தில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான சாய ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

நேற்று மாலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பாய்லரில் திடீரென தீ பிடித்து, வெடித்தது.

இதன் காரணமாக, அந்த இடம் முழுதும் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். தீ கட்டுப்படாததால், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். பல்லடம், அவிநாசி மற்றும் வடக்கு ஆகிய இடத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சென்று அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், தீ விபத்தில் பாய்லர், துணி மற்றும் பொருட்கள் எரிந்து சேதமானது.

Advertisement