நாகமுத்து மாரியம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்
: அரியாங்குப்பம்: நயினார்மண்டபம் கடலுார் சாலையில் உள்ள நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 43ம் ஆண்டு செடல் திருவிழாவையொட்டி, பக்தர்கள் 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது.
செடல் திருவிழாவையொட்டி, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனை தொடர்ந்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் இரவில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
நேற்று பக்தர்கள் 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து, நாகமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாரானை நடந்தது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதை தொடர்ந்து, இன்று (14ம் தேதி) இரவு 7:00 மணிக்கு நாகமுத்து மாரியம்மன் அலங்காரத்துடன் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (15ம் தேதி) இடிதாங்கி அங்காளம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தொடர்ந்து மரப்பாலம் குளத்தில் முளைப்பாரி கரைக்கும் வைபவம் நடக்கிறது.
மேலும்
-
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
-
மனு கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்: தனிப்பிரிவு செயல்பாடுகளை ஆய்வு செய்வாரா முதல்வர்?
-
நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு
-
மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
-
பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து