ஏ.பி.வி.பி., ஸ்தாபன  தினம் பொதுக்கூட்டம்

சிவானந்தா காலனி: அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி.,) 78வது ஸ்தாபன தின பொதுக்கூட்டம் சிவானந்தா காலனியில் நடந்தது.

மாநில செயலாளர் ஸ்ரீசூர்யா, ‘‘ஏ.பி.வி.பி., அமைப்பு 78 ஆண்டுகளாக மாணவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுத்து வருகிறது. நாட்டின் முதுகெலும்பு இளைஞர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம். இன்றைய சமுதாயத்தில் மாணவர்கள் பிரச்னைக்கு தீர்வு கொடுக்கக்கூடிய இந்த அமைப்பானது, பெண் சிசுக்கொலை தடுப்பு சட்டம் உருவாக காரணமாக இருந்துள்ளது,’’ என்றார்.

மாநில இணை செயலாளர் கோபி, மாநில செயற்குழு உறுப்பினர் கோகுல் பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement