பகலில் எரியுது லைட்டு... மின்சாரம் வேஸ்ட்டு!

1. ஒளிரா விளக்கு விளாங்குறிச்சி ரோடு ஸ்ரீ விக்னேஷ் நகர் 2வது வீதி தெரு விளக்கு கடந்த மூன்று மாதமாக எரிவதில்லை. இருளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை.

--ரமேஷ்:

2. தெருவிளக்கு சரிசெய்யப்படுமா? சிங்காநல்லுார் காமராஜர் மெயின் ரோடு கோவிந்தசாமி நகரில் மூன்று மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை.

-ராஜ்குமார்:

3. மின்கம்பம் சேதம் வேலாண்டிபாளையம் கே.கே.புதுார் ரோடு ராஜீவ் நகர் முதல் வீதியில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது.

-தங்கராஜ்:

4. விழும் நிலையில் மரம் ஆர்.எஸ்.புரம் சீனிவாச ராகவன் வீதியில் உள்ள காந்தி பூங்காவில் மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது.

-விஜய்:

5. சுகாதார சீர்கேடு மாநகராட்சி வார்டு, 53 லட்சுமிபுரம் 6வது வீதியில் சாக்கடையில் குப்பை சேர்ந்துள்ளதால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

-ராஜேந்திரன்:

6. அணையா விளக்கு வெள்ளக்கிணறு சவுடாம்பிகா நகரில் பல நாட்களாக இரவும் பகலும் தெருவிளக்கு எரிந்து கொண்டுள்ளது.

-ராஜா:

7. ரோடு மோசம் சிட்ரா வார்டு 55ல் ஏரோட்ரோம் ரோடு, ராணி கார்டன் வரை பழுதடைந்துள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

-ராபர்ட்:

8. நிழற்குடை வேண்டும் பொள்ளாச்சி ரோடு தனியார் பல்கலை முன் நிழற்குடை இல்லாததால், வெய்யில், மழை காலங்களில் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

-ஹரிதாஸ்:

9. குப்பை குவியலால் துர்நாற்றம் பீளமேடு சவுரிபாளையம் மெயின் ரோட்டில், பல இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பையால் துார்நாற்றம் வீசுகிறது.

-மணிகண்டன்:

Advertisement