அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சி; துணை அதிபர் ஜேடி வான்ஸ் பகீர் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைக்க இஸ்ரேல் முயற்சி செய்து வருகிறது என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க படைகள் ஈரானின் வடக்கு பகுதிகள் மீது வான்வழி தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளன. ஈரான் தலைநகரின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்த நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் பேசியதாவது: அமெரிக்கா- ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் அரசு தடையாக உள்ளது. அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைக்க இஸ்ரேல் அரசில் உள்ள சிலர் முயற்சி செய்கின்றனர். அவர்கள் போரை காலவரையின்றி நீட்டிக்க விரும்புகிறார்கள். அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக இஸ்ரேல் அரசு செயல்படுகிறது.
இஸ்ரேல் அரசில் இருக்கும் சிலர், ராணுவ நடவடிக்கையைத் தொடர விரும்புவதால், எங்களைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இஸ்ரேல் அரசின் சில உறுப்பினர்களுடன் தனக்கு நல்ல உறவுகள் இருந்தாலும், போரை காலவரையின்றித் தொடரச் செய்வதற்காக, இஸ்ரேல் அரசில் சிலர் சதி செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியும்.
பல நாடுகள், நட்பு நாடுகள் மற்றும் எதிரி நாடுகள் அமெரிக்கக் கொள்கையில் செல்வாக்கு செலுத்த முயற்சிகின்றன. அந்த செல்வாக்கு, உண்மையில் அமெரிக்க அரசின் முக்கிய முடிவெடுப்பைப் பாதிக்கும்போதுதான் அது எனக்குக் கவலையளிக்கிறது. இவ்வாறு ஜேடி வான்ஸ் பேசியுள்ளார்.
அமெரிக்கா மட்டும் இல்லய் என்றாள் இஸ்ரேல் எப்போவோ காணாமேல் போய் இருக்கும்
இஸ்ரேலிய யூதர்கள் மட்டும் இல்லையென்றால் யூ எஸ் ஆப்பிரிக்க நாடுகள் போலவே அடிமட்டத்தில் இருந்திருக்கும்.
ஹி...ஹி...ஹி...இஸ்ரேல் மட்டும் இல்லையென்றால் அமெரிக்கா எப்போதோ வளைகுடா நாடுகளில் இருந்து காணாமல் போய் பெட்ரோல் டாலர் வர்த்தகமே அவங்க கையை விட்டு சென்றிருக்கும்.
கல்வி மிகவும் முக்கியமானது. நீங்கள் வரலாறு படிக்க வேண்டும். ஐக்கிய அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஜூலை 4, 1776 அன்று நிறுவப்பட்டது, அதாவது 250 ஆண்டுகள் ஆகின்றன. அதே சமயம், இஸ்ரேல் தேசத்தின் வரலாறு சுமார் 3,500 ஆண்டுகள் பழமையானது. இந்த தேசத்தின் பெயர் பைபிளிலும் குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் குறைந்தது 3000 ஆண்டுகளாகத் தொடர்ச்சியான துன்புறுத்தல்களைச் சந்தித்து உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் மீது உள்ள வெறுப்பில் இதுபோன்று கருத்து தெரிவிக்காதீர்கள்.
அனைத்து முன்னணி எண்ணெய், மருந்து நிறுவனங்கள், வங்கிகள், பல்கலைக்கழகங்கள், காப்பீட்டுத் துறை, ஊடகம், விவசாயம், பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை யூத தொழில்முனைவோர்களால் நிறுவப்பட்டன அல்லது அவர்களால் வழிநடத்தப்படுகின்றன. இந்த வணிகங்களில் அவர்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்கையோ அல்லது பெரும் உரிமையையோ கொண்டுள்ளனர். மெட்டா, ஆல்பாபெட், oracle , டெல் டெக்னாலஜிஸ் ஆகியவை யூதர்களுக்கு இஸ்ரேலியர்களுக்கு சொந்தமானவை. அவர்கள் இந்த நிறுவனங்களை மூடினாள் , அமெரிக்கா உலகின் ஏழ்மையான நாடாக மாறும். உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ஒரு யூதர் ஆவார். அவரின் சொத்து மடிப்பு உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் ,
அமெரிக்காவின் துணை அதிபர் மிகுந்த புத்திசாலி அவர் ஈராக் போர்க்களத்தில் நேரடியாக பணியாற்றிய தைரியசாலியும் கூட அவருக்கு தெரியாத உலக அரசியல் இங்கே உள்ள்ளவருக்கு தெரிவதாக அவர் நம்புவதற்கு பேருதான் தேஜாவு???
என்ன சுள்ளான், யாராவது இஸ்ரேலுக்கு எதிரா கருத்து சொன்னா உங்களுக்கு சந்தோசம் தாங்காதே. தலையில் இருக்கும் கொண்டையை மறந்துட்டியே.
அமெரிக்கா தான் உலகத்துக்கே போலீஸ் நாடு தானே. எங்கே இஸ்ரேலியன் நட்பு வேண்டாம்னு தூக்கி எறியுங்கள் பார்ப்போம்.
நீங்க உங்க லாபத்தை பாக்கறீங்க. இஸ்ரேல் அவன் லாபத்த பாக்குறான். அமைதியாவது ஒப்பந்தமாவது. பேசாம இஸ்ரேலை சப்போர்ட் பண்ணுறதை நிறுத்துங்க. அவிங்க ரெண்டுபேரும் அடிச்சிக்கட்டும்.
நம்ம ஜப்பான் துணை அதிபரை டிரம்ப்க்கு போன் போடச்சொல்லி போரை நிறுத்துவதுதான் ஒரே வழி. அப்படி இல்லனா லண்டனில் இருந்து பிளைட்டை நேரா அமெரிக்காவிற்கு விடச்சொல்லி டிரம்ப்ஐ நேரடியா சந்திக்க சொல்லணும்.
அமைதி ஒப்பந்தம் இருக்கும்போது கொழுப்பெடுத்துப்போய் கப்பல்களை தாக்கினான் ஈரான். பிறகு நீங்கள் தான் மீண்டும் போரை துவக்கினீர்கள். இஸ்ரேல் மீது ஏன் பழியை போடுகிறீர்கள் உண்மையில் அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைப்பது ஈரான் தான். இது கூட புரிந்துகொள்ளாத நீங்க எல்லாம் துணை அதிபர்.