சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் 

பண்ருட்டி: சரநாராயண பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று, ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் ஸ்ரீதன்வந்திரி பெருமாளாக அருள்பாலித்தார்.

  இதையொட்டி நேற்று  காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம்; 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:30 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடாகி திருகண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  பகல் 12:30 மணிக்கு  உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடிபூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. 

பக்தர்கள் அனைவருக்கும் தன்வந்திரி மகா பிரசாதமாக பலவகை மூலிகைகள் கொண்டு தயாரித்த லேகியம் வழங்கினர். 

Advertisement