தமிழகத்தில் 'ரெஸ்டோ பார்': அனுமதிக்க அரசு பரிசீலனை
சென்னை: தமிழகத்தில், 'ரெஸ்டோ பார்' எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்களை அனுமதிப்பது குறித்து, 'டாஸ்மாக்' நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்கிறது.
இந்த கடைகளை ஒட்டிய காலியிடத்தில், 'பார்' எனப்படும் மதுக்கூடங்கள் நடத்த தனியாருக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கு, கட்டணம் செலுத்த வேண்டும்.
இது தவிர, கிளப்கள், நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்களில் மது விற்க, தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், 'ரெஸ்டோ பார்' எனப்படு ம் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன.
இதேபோல, தமிழகத்தில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
இந்த மதுக்கூடங்களுக்கு சிறப்பு வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
மதுக்கடைகளில் உள்ள மதுக்கூடங்களில் பல்வேறு முறைகேடு நடக்கின்றன. இதனால், அரசுக்கு வர வேண்டிய வருவாய், தனியாருக்கு செல்கிறது.
இதைத்தடுக்க நட வடிக்கை எடுத்தால், அரசு தவறான முடிவை எடுப்பது போன்ற தோற்றத்தை ஏ ற்படுத்துகின்றனர். ரெஸ்டோ பார் என்பது, முன்னணி உணவகங்களின் வளாகத்திலேயே, ஒரு பகுதியில் மதுக்கூடமும் இருக்கும். அதை, அந்த உணவகமே பராமரிக்கும்.
அங்கு வி ற்கப்படும் மது வகைகளை, டாஸ்மாக் வழங்கும். உணவகங்களில் உணவு தரமாக இருப்பதுடன், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருட்டு திராவிட மாடல் 2.0 ஆட்சி....
நல்ல முடிவு. தரமான மது வகைகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்
நான் கூட இவர்கள் நல்லாட்சி வழங்கி விடுவார்கள் என்று வடிவேல் சொல்வது மாதிரி நம்பி இருந்தேன். இவர்களும் தமிழ்நாட்டு மக்களை, இளைஞர்களை போதையில் தள்ளி நாசம் செய்த திமுக., அதிமுக வழியைத்தான் பின்பற்றுகிறார்கள், என்னும் பொழுது இவர்களும் நாசமாகப் போகட்டும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இருந்தாலும் நாட்டை நாசமாக்கத் துடிக்கும் இவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.மேலும்
-
மனிதநேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்; முதல்வர் விஜய்
-
தங்கம் சவரனுக்கு ரூ.400, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சி; துணை அதிபர் ஜேடி வான்ஸ் பகீர் குற்றச்சாட்டு
-
கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி படம் பார்க்க போறீங்களா; 30 நிமிடம் முன்னதாக போகணும்!
-
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது வான்வழி தாக்குதல்; 7 பேர் உயிரிழப்பு
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 13 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்