அத்தப்பம்பட்டி ஏரியில் மீன்பாசி ஏலம் ரத்து
மல்லசமுத்திரம்:அத்தப்பம்பட்டி
ஏரியில், ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளதால் அதை முறையாக
அகற்றிவிட்டு பின்னர், மீன்பாசி ஏலம் நடைபெறும் என, அதிகாரிகள்
தெரிவித்தனர்.
மல்லசமுத்திரம் யூனியன், அத்தப்பம்பட்டி ஏரி
சர்வே எண்;169ல், நேற்று மீன்பாசி ஏலம் குத்தகைக்கு விடப்படுவதாக
அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஏரியில் அதிகளவில்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, பொதுமக்கள்
அதிகாரிகளிடத்தில் முறையிட்டதன்பேரில், ஏலம் ரத்து
செய்யப்பட்டது.
இதுகுறித்து, மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி
அலுவலர் சுரேஷ் கூறுகையில்,''ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி
பின்னர், இ-டெண்டர் முறையில் முறையாக ஏல அறிவிப்பு வெளியாகும்,''
என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 13 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் செல்வாக்கு தொடர்ந்து சரிவு
-
குள்ளஞ்சாவடி மினி ஸ்டேடியம் பணி விறு விறு
-
தமிழக மருந்து, ஆபரண உற்பத்தியில் சிறுதொழில்களை மேம்படுத்த முடிவு
-
இறக்குமதி பொருட்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்
-
வீரமங்கை வேலுநாச்சியார் வரலாற்று நாடகம், பாராட்டு விழா
Advertisement
Advertisement