மதுரையில் காற்றழுத்தம்: வானில் வட்டமடித்த விமானங்கள்

அவனியாபுரம்: மதுரை விமான நிலையப் பகுதியில் காற்றழுத்தம் காரணமாக ஒரு விமானம் 40 நிமிடங்களும், மற்றொரு விமானம் 25 நிமிடங்களும் வானில் வட்டமடித்து தரை இறங்கின. நவி மும்பையில் இருந்து 179 பயணிகளுடன் நேற்று மதியம் 1:25 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், மதியம் 3:25 மணிக்கு மதுரை வந்தது.

மதுரை விமான நிலையப் பகுதியில் அதிகமான காற்றழுத்தம், வானிலை மாற்றம் காரணமாக அந்த விமானம் தரையிறங்க முடியாமல் 40 நிமிடங்கள் வானில் வட்டமடித்து பின் தரை இறங்கியது.

அதேபோல் சென்னையில் இருந்து நேற்று மதியம் 2:25 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், மதுரைக்கு நேற்று மதியம் 3:35 மணிக்கு வந்தது. அந்த விமானமும் காற்றழுத்தம் காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் 25 நிமிடங்கள் வட்டமடித்து பின் தரையிறங்கியது. அந்த விமானத்தில் அமைச்சர் நிர்மல் குமார் உட்பட 166 பயணிகள் பயணம் செய்தனர்.

Advertisement