'சேம் சைடு கோல் போடுறாரே!'
சிவகங்கை தொகுதிக்கு சமீபத்தில் வந்த காங்., - எம்.பி., கார்த்தி, பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'அ.தி.மு.க., தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் சிலர் வெளியேறுகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க., இருக்க வேண்டும். அது ஒரு பாரம்பரியமான கட்சி. த.வெ.க.,வுக்கு யாரும் புதிதாக வரவேண்டும் என்ற அவசியம் கிடையாது; வேறு கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.
'த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களை வைத்தே ஐந்தாண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தலாம். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களின் ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் முடிந்த இரண்டு மாதங்களுக்குள் இவ்வளவு பேர் ராஜினாமா செய்வதை, தொகுதி மக்களுக்கு செய்கிற துரோகமாகத் தான் பார்க்கிறேன்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'த.வெ.க., கூட்டணியில் இருந்துட்டே, 'சேம் சைடு கோல்' போடுறாரே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
இவர் சொல்லுறது உண்மை தானே இதில் என்ன சேம சைடு கோல் ?மேலும்
-
ஏஐ துறையில் ஒரு நாட்டின் ஆதிக்கம் மட்டுமே இருக்கக்கூடாது; சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்
-
சென்னை -பெங்களூரு இடையே புல்லட் ரயில்: ரூ.18 ஆயிரம் கோடி திட்டத்திற்கு டெண்டர்
-
கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ரூ.7 .5 லட்சம் லஞ்சத்தொகை பரிமாற்றம்; சோதனையில் அம்பலம்
-
தொடந்து நீடிக்கும் அமெரிக்கத் தாக்குதல்கள்; ஈரான் கடும் எச்சரிக்கை
-
சிறிய வீடு கட்ட பிரீகாஸ்ட் கட்டுமான முறை உகந்ததா?
-
சுவர்களில் ஈரம்...அலர்ஜி ஏற்படுத்தும்! ஆரம்பத்திலேயே தடுப்பது கட்டடத்துக்கும் நலம்