மக்கள் தொகை கணக்கெடுப்பு 3,320 பணியாளர்கள் நியமனம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த 3,320 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் வீரப்பன் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் களப்பணியாளர்கள் 2,868 பேர்; மேற்பார்வை யாளர்கள் 452 பேர் என மொத்தம் 3,320 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு, கடந்த 6ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
பயிற்சி முடித்தவர்கள், மாவட்டம் முழுதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
ஆக., 1ம் தேதி முதல் 30 வரை நடக்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு, பொதுமக்கள் சரியான விபரங்களை தெரிவித்து, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஏஐ துறையில் ஒரு நாட்டின் ஆதிக்கம் மட்டுமே இருக்கக்கூடாது; சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்
-
சென்னை -பெங்களூரு இடையே புல்லட் ரயில்: ரூ.18 ஆயிரம் கோடி திட்டத்திற்கு டெண்டர்
-
கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ரூ.7 .5 லட்சம் லஞ்சத்தொகை பரிமாற்றம்; சோதனையில் அம்பலம்
-
தொடந்து நீடிக்கும் அமெரிக்கத் தாக்குதல்கள்; ஈரான் கடும் எச்சரிக்கை
-
சிறிய வீடு கட்ட பிரீகாஸ்ட் கட்டுமான முறை உகந்ததா?
-
சுவர்களில் ஈரம்...அலர்ஜி ஏற்படுத்தும்! ஆரம்பத்திலேயே தடுப்பது கட்டடத்துக்கும் நலம்