வள்ளலார் மன்றத்தில் ஆடி மாத பூச விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில்  ஆடி மாத பூச விழா நடந்தது.

மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் ரோட்டரி துணை ஆளுனர் வெங்கடேசன் வரவேற்றார். முர்த்தி, தலைமை ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்தனர். தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் சக்திவேல், ரோட்டரி தலைவர் துரை, டாக்டர் நாச்சியப்பன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு ஜோதி தரிசனத்தை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement