நவசக்தி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா 6ம் தேதி துவக்கம்
புதுச்சேரி: திலகர் நகர் நவசக்தி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா வரும் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
புதுச்சேரி, திலகர் நகர்(பேட்டையான்சத்திரம்) நவசக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 25ம் ஆண்டு ஆடித்திருவிழா வரும் 6ம் தேதி மாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தொடர்ந்து, வரும் 7ம் தேதி காலை 7:30 மணிக்கு கரக ஊர்வலம், 10 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 6 மணிக்கு கும்பம் கொட்டுதல் மற்றும் அம்மனை வர்ணித்தல் நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிவுலா நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, வரும் 9ம் தேதி காலை 8 மணிக்கு தேர் திருவிழா, மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், தீபாராதனை நடக்கிறது. 10ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், பொதுக்குழு மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
மேலும்
-
சட்ட விரோதமாக மண் அள்ளும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?
-
விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளே எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு
-
மஹாராஷ்டிராவில் கார் மீது டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
அதிக இளம் கிராண்ட் மாஸ்டர்கள் கொண்ட தமிழகம்: முதல்வர் விஜய் பெருமிதம்
-
பதவி பறிபோன திமுக விஐபி அமைச்சரை சந்திக்க வந்தது ஏன்?