நாகாலாந்தில் நிலச்சரிவு: 8 பேர் உயிரிழப்பு
மோன்: நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மோன் நகரம், திஜ்தித் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
தகவல் அறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், அசாம் ரைபிள்ஸ், போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 8 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்ட விரோதமாக மண் அள்ளும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா?
-
விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
-
பார்லி மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளே எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு
-
மஹாராஷ்டிராவில் கார் மீது டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி
-
அதிக இளம் கிராண்ட் மாஸ்டர்கள் கொண்ட தமிழகம்: முதல்வர் விஜய் பெருமிதம்
-
பதவி பறிபோன திமுக விஐபி அமைச்சரை சந்திக்க வந்தது ஏன்?
Advertisement
Advertisement