மீன்கள் வளர்க்க கைதிகளுக்கு பயிற்சி

சேலம்:சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு மீன் வளர்ப்பு, அதற்கான அரசு மானிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

அதில் மாவட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் மனுநீதிசோழன், மீன் வளர்ப்பு முறை, அரசு மானியங்கள், மீன் பண்ணை அமைப்பதற்கான வழிமுறை, அதற்கான வாய்ப்பு குறித்து எடுத்துரைத்தார். 250 கைதிகள் பயன்பெற்றனர்.இதுகுறித்து சிறை எஸ்.பி., வினோத் கூறுகையில், ''கைதிகளின் திறன் மேம்பாடு, மறுவாழ்வை நோக்கமாக கொண்டு, வாரந்தோறும் தொழிற்பேட்டை நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தொழில், சுயதொழில் வாய்ப்பு குறித்து பயிற்சி, கருத்தரங்கம் நடக்கிறது,'' என்றார்.

Advertisement