அம்மன் வேடத்தில் திரிஷா; பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

8

ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார் பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழா நேற்று தொடங்கியது. இதற்காக, ஆத்துார் பயணியர் மாளிகை பகுதியில், முதல்வர் விஜய் படத்தின் பின்னால், ராவணன் தலை இருப்பது போன்றும், அம்மன் வேடத்தில் நடிகை திரிஷா இருப்பது போன்றும் பேனர் வைத்திருந்தனர்.

இந்த பேனரால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, திரிஷா படம் இருந்த இடத்தில், வேறு ஒரு பெண், அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படத்தை, த.வெ.க.,வினர் ஒட்டி வைத்தனர்.

இந்நிலையில், தகவலறிந்த ஆத்துார் டவுன் போலீசார், பொது மக்களுக்கு இடையூறாக பேனர் வைத்துள்ளதாக கூறி, அதை அகற்றினர்.

தொடர்ந்து, பேனர் அச்சடித்த கடை உரிமையாளரான தலைவாசலை சேர்ந்த கோகுல், பேனர் வைத்த ஆத்துாரை சேர்ந்த சந்துரு ஆகியோர் மீது, அனுமதி பெறாமல் விளம்பர பதாகை வைத்தல், இடையூறு ஏற்படுத்துதல் உட்பட இரு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement