இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவுகள் வலுப்பெறும்; புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து

5



நமது நிருபர்




இந்தியா-பிரிட்டன் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் புதிய பிரதமராகத் தொழிலாளர் கட்சியின் தலைவரான ஆன்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றுள்ளார். இந்தியப் பிரதமர் மோடி, பர்ன்ஹாம் பிரதமராகப் பதவியேற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற ஆன்டி பர்ன்ஹாமுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும், பிரிட்டனும் நல்ல உறவை கொண்டுள்ளன.

இரு நாடுகளுக்கு இடையே அமலுக்கு வந்துள்ள வர்த்தக ஒப்பந்தம் (CETA) மூலம், இந்தியா-பிரிட்டன் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும். பொருளாதார உறவுகள் இன்னும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement