ஒப்பந்த ஊழியர்கள் 4ம் நாளாக போராட்டம்

மேட்டூர்:மேட்டூர் அனல்மின் நிலைய ஒப்பந்த நிறுவனங்களில், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பலர், 8 ஆண்டுக்கு மேல் வேலை செய்கின்றனர்.

அவர்கள், மின் கழகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி, கடந்த, 15 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4ம் நாளான நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலர், மேட்டூர் அனல்மின் நிலைய நுழைவாயில் உட்பகுதியிலும், சிலர், நுழைவாயில் வெளியேயும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதத்தை தவிர்க்க, மேட்டூர்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement