பார்லியில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வாருங்கள்; ராகுலுக்கு பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் சவால்

9


புதுடில்லி: பார்லிமென்டில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வாருங்கள் என காங்கிரஸ் எம்பி ராகுல் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் நிதின் நபின் கூறியதாவது: காங்கிரஸ் எம்பி ராகுல், எதிர்க்கட்சியினர் நீட் தேர்வு உள்ளிட்ட மாணவர்கள் பிரச்னைகளை பார்லிமென்டில் முன்வந்து விவாதிக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து அனைத்து மட்டங்களிலும் விவாதிக்க தேஜ கூட்டணி அரசு முழுமையாக தயாராக உள்ளது.

இருப்பினும் ராகுல், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளும் இந்த விவாதத்தில் இருந்து ஒதுங்கி நிற்கின்றன. விவாதிக்க அவர்கள் சபைக்கு வந்தால் அவர்களின் இரட்டை வேடம் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் அம்பலமாகிவிடும் என்பது அவர்களுக்கு தெரியும். ராகுலின் அரசியல் பிம்பம் ஒரு தப்பியோடியவரின் பிம்பமாகவே இருந்து வருகிறது. பாஜ எம்பிக்களும், தேஜ அரசும் ஒவ்வொரு பிரச்னையையும் விவாதிக்கவும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கவும் தயாராக இருக்கின்றன.

50-60 ஆண்டுகளாக இளைஞர்களை ஏமாற்றுவது, தூண்டிவிடுவது மற்றும் தவறாக வழிநடத்துவது போன்ற நீண்ட வரலாறு காரணமாக ராகுலும், காங்கிரசும் பேச்சுவார்த்தக்கு முன்வர மாட்டார்கள். பிரதமர் மோடி தலைமையிலான தேஜ கூட்டணி அரசு, இளைஞர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது. இவ்வாறு நிதின் நபின் கூறினார்.

Advertisement