மருத்துவமனையில் சோனம் வாங்சுக்கை சந்தித்து நலம் விசாரித்த மத்திய அமைச்சர்கள்

7

புதுடில்லி: டில்லியில் சிஜேபி இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை மத்திய அமைச்சர்கள் நேற்று சந்தித்து பேசினர்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, தலைநகர் டில்லியில் 'காக்ரோஜ் ஜனதா பார்ட்டி' என்ற இயக்கத்தினர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பார்லியை முற்றுகையிட முயன்ற போது ஏற்பட்ட வன்முறையால், போராட்டக்களம், போர்க்களமாக மாறியது.

இந்த நிலையில், சிஜேபி இயக்கத்தின் கோரிக்கைக்கு ஆதரவாக டில்லியில் 21 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்தர் சிங் ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட போதிலும் போராட்டத்தை தொடர்ந்த அவரை, டில்லி போலீசார் வலுக்கட்டாயமாக சப்தர்ஜூங் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் வாங்சுக், டில்லி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த சூழலில் அவரை மத்திய அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளனர்.

டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த 32 நாட்களாக சிஜேபி இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement