ஆம்னி பஸ் மோதல்தானியங்கி சிக்னல் பழுது 

 கடலுார்: தானியங்கி சிக்னல் கம்பத்தில் ஆம்னி பஸ் மோதியதால் சேதமடைந்தது. கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் அண்ணாமேம்பாலம் சந்திப்பில் தானியங்கி சிக்னல் இயங்கி வருகிறது. நேற்று காலை அவ்வழியாக சென்ற ஆம்னி பஸ் திடீரென சிக்னல் கம்பத்தில் மோதியது.

அதனால் கம்பம் கீழே சாய்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதையடுத்து போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் சிக்னல் கம்பத்தை அகற்றினர். அதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது.  

 

Advertisement