டில்லி போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது; ஸ்டாலின்

14

புதுடில்லி: ''டில்லியில் இளைஞர்கள் நடத்தும் போராட்டம் தற்போது நாடு முழுவதின் கவனத்தையும் ஈர்த்துள்ளது'' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: புதுடில்லியில் இளைஞர்கள் நடத்தும் போராட்டம் தற்போது நாடு முழுவதின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெரிய அளவிலான முறைகேடுகளைச் சாத்தியமாக்கும் வகையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என்று நாங்கள் தான் முதலில் எச்சரித்தோம்.

அதனால் தான் திமுக ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துக்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. தமிழகத்திற்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது.

மற்ற எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ஒழிப்பதுதான் இந்தப் போராட்டங்களின் மையமாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே இந்தப் பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்கும். நீட் தேர்வை தடைசெய்யுங்கள்; மாணவர்களை காப்பாற்றுங்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement