நீட் எதிர்ப்பு போராட்டம்; குபீர் போராளிகளுக்கு கொண்டாட்டம்!
-நமது நிருபர்-
மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்று வந்து விட்டாலே, ஒரு சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல; புரட்சி செய்யப் புறப்பட்ட சே குவேராவின் வாரிசுகளாக, தங்களை எண்ணிக்கொண்டு புத்தாடை அணிந்து புறப்பட்டு விடுவர்.
இத்தகைய திடீர் குபீர் போராளிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பிரகாஷ் ராஜ். அடுத்தடுத்த இடத்தில் இருப்பவர்கள் சத்யராஜ், அமீர், வெற்றி மாறன், பா.ரஞ்சித், ஜோதிகா போன்றவர்கள்.
இந்த குபீர் கும்பலில், ஆண்டுக்கு ஆண்டு சில பேர் புதிதாக சேருவர்; அப்படி இந்தாண்டு சேர்ந்திருப்பவர்கள் ரேவதி, ஆன்ட்ரியா உள்ளிட்டவர்கள்.
கறுப்புப் பணம் கரை புரளும் திரைத்துறையில் இருந்து கொண்டு, அதைப்பற்றி வாயே திறக்காமல் ஊர் உலகத்துக்கு நியாய தர்மத்தை வண்டி வண்டியாக பேசும் இந்த கும்பலுக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் கிடையாது.
நடிக்க ஆசைப்படும் பெண்களை தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவோரை தட்டிக்கேட்க துப்பில்லை. நாட்டுக்கும் அரசுக்கும் புத்தி சொல்லிக் கொண்டிருக்கிறது இந்த கும்பல். இவர்களுக்கு இப்போது இப்போது கிடைத்திருப்பது நீட் எதிர்ப்பு போராட்டம்.
டில்லியில் போராடுபவர்கள் யார், அவர்களது பின்னணி என்ன, போராடுபவர்களுக்கு தினமும் வகை வகையான உணவு வந்து சேருவது எப்படி, போராட்டத்தில் போலீசாரை வாள் கொண்டு தாக்கியவர்கள் யார், செய்தியாளர்களை தாக்கியது யார் என்றெல்லாம் இந்த கும்பலுக்கு கவலை எதுவும் இல்லை.
தங்களுக்கு பேச ஒரு மேடை வேண்டும், பேசுவதற்கு மைக் வேண்டும், கை தட்டி ஆர்ப்பரிக்க சிலர் இருந்தால் போதும்; இன்றைய தினத்தில் விளம்பர வெளிச்சம் கிடைப்பதற்காக எதுவும் செய்ய தயாராக இருக்கிறது, இந்த திடீர் போராளிக் கும்பல். இத்தகைய குபீர் பேர்வழிகளின் உண்மை முகங்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டால் தான் நாட்டுக்கு விடிவுகாலம்.
இப்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்து விட்டார். ஆனாலும் இந்த குபீர் போராளிகள் போராட்டத்தை முடித்துக் கொள்ள போவதில்லை. ஏனெனில் இவர்களின் நோக்கம் என்னவென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
எல்லோரும் கிரிப்டோ. கலப்பினம்.
எந்த அமைப்பும், அக்கறையும் மக்கள் மீது இருப்பதில்லை. மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் போராடலாம். குறிப்பிட்ட காலம் வரை முடிவு இல்லை என்றால் அதை நிறுத்த நீதி மன்றம் முன்வர வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு உருப்படாது
இந்த கும்பலை என்ஐஏ கண்காணிக்க வேண்டும்.ஏன்னா பணம் வாங்காமா எதையும் செய்ய மாட்டாங்க .....சுய லாபத்திற்காக எதையும் செய்யும் கூட்டமிது...எத்தனை சினிமா தயாரிப்பார்களை தவிக்க விட்டு கூட்டணி.
சத்யராஜ் பிரகாஷ் ராஜ் போன்ற திருட்டு பச்சோந்திகளுடன் சேர்ந்து விட்டார் ரேவதி. வெட்கம் மானம் ரோஷம் இல்லாத தெரு ஜென்மங்கள்
Women who never even appeared outside her house in front of the strangers will show their guts and courage whenever the strangers happens to be Anti-nationals.
Anti-national, Separatist and Anti-social politicians are facing the ire of the public of our Bharat.
The clock is ticking. Let us wait and watch.
நடிகன்-நடிகை நடிப்பதை குடும்பத்துடன் பார்க்கும் பொழுது முகம் சுளிக்கும் அளவிற்கு இருக்கும். ஒழுக்கக்கேடு என்றால் இவர்களிடம் இருந்து தான் சிறுவர் சிறுமியர் கற்றிருப்பர். ஆனால் இவர்களே நேரில் பெரிய உத்தமி உத்தமன் போல் பேட்டி கொடுப்பர்
மாணவர்கள் மீது அக்கறை கொண்ட சினிமா பிரபலங்கள் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் காலங்களில் எந்த திரைப்படத்தையும் வெளியிட கூடாது
இன்றைய மாணவர்கள் அறிவாளிகள் மற்றும் போராளிகள் போன்றதொரு மிதப்பு ஏற்பட்டுக்கொண்டுள்ளது. பொதுவாய் மத்திய அரசு என்பது வெறும் பொம்மலாட்ட பொம்மை மட்டுமே. மாநில அரசுகளே வானளாவிய அதிகாரம் கொண்ட அமைப்பு. இந்த மாணவர்களால் தாங்கள் சார்ந்த மாநிலங்களை எதிர்த்து போராட்டம் செய்ய இயலாது. இரவோடிரவாக மாணவர்களை சீட்லெஸ் ஆக்கி விடுவார்கள் மாநில அரசினை நிர்வகிப்பவர்கள். ஆனால் நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகள் சுகாதாரம் ஊழல் சட்டம் ஒழுங்கு ஒழுக்கம் போன்ற அனைத்தும் மாநில அரசு சார்ந்தவை. இவர்கள் நல்லவர்கள் என்றால் இவர்களை எதிர்த்து அல்லவா போராட வேண்டும். நீட் நாட்டின் தலையாய பிரச்சினை போல் போராடிக்கொண்டுள்ளனர்.
என்னா மாய்மாலம்?? காங்கிரஸூ நீட் கொண்டுவந்தது.அதை நீக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடி உச்சநீதி மன்றம் நீக்கமுடியாது என உத்தரவிட்டது. ஏன் இந்த யோக்கியர்கள் இப்போது போராட வேண்டும்?. வினாத்தாள் கசிவு கேடு கெட்ட கிரிமினல்கள் காசுக்காக செய்வது. கல்வி மந்திரி எந்த வகையில் கிரிமினல்களை வினாத்தாள் கசியும் முன்னே கண்டுபிடிப்பது??.கான்கிராஸ் கூமுட்டைகள் அரசியல்வாதிகளே அல்ல. பாஜக அரசுக்கும், பிரதமர் மோடி அவர்களுக்கும் மக்கள் தந்த அரசாட்சியை கான்ஸ்டிடியூஷன் படியும் அவர்கள் கட்சிஅறிவித்த கொள்கைகள்படியும் நடத்த பாஜகவுக்கு 100 சதவித உரிமை உண்டு எந்த கூமுட்டை எதிர்கட்சியும் கேள்வி கேட்க முடியாது. அப்படி இருந்தும், ஜனநாயக முறைப்படி கான் கிராஸை பார்லிமெண்ட் விவாதத்துக்கு அழைத்தால், ராகுல் பப்பு காந்தியும் கார்கேவும்,தேவையின்றி லோக்கல் அரசு கல்லூரி மாணவத்தலைவன் பஸ் நிறுத்த,சாலை மறியல் போராட்டம் செய்வது போல ரவுடித்தனம் செய்ய கிரிமினல்களை கொண்டுவரும் அடாவடியானது உண்மையான பார்லிமெண்டேரியன்களை விக்கித்து போக வைத்துள்ளது. இந்த காங்கிரஸ் தாங்கள் வீணானது பத்தாது என்று மற்ற எதிர்கட்சிகளையும் வீணாக்கிவிட்டது. அது தெரியாமல் டெல்லிக்கு போயும் சாலை மறியல் செய்யும் கேவல அரசியல் வியாதிகளை மக்கள் அடுத்த தேர்தலில்
மண்ணை கவ்வ வைப்பார்கள். K9 ஆக மாறிவிட்ட கமயூனிஸ்டுகளே சீனாவிற்கு இப்போது சென்று அங்கு மக்களும் பார்லிமெண்டும் எப்படி நாட்டை முன்னேற்ற அரசாங்கத்துடன் ஒத்துழைக்கிறார்கள் என பார்த்துவிட்டு வாருங்கள். இன்னும் 2029 வரை பாஜக ஆட்சி தான் அதற்கு பிறகு நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டுமானால் முதலில்
ஜனநாயகத்துக்கு மதிப்பளியங்கள்