நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
மதுரை: நம்முடைய நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பது தான்; நீட் தேர்வு தேவையற்றது. நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: நம்முடைய நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பது தான்; நீட் தேர்வு தேவையற்றது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிக சுமையை தான் கொடுக்கும். எந்த வித பயனும் இல்லை என்பதை நாம் தெளிவாக சொல்லி இருக்கிறோம்.
அரசு சார்பாக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு, அறவழியில் நடக்கும் போராட்டங்களுக்கு முழு அளவில் பாதுகாப்பு கொடுத்து, அவர்களுக்கு தேவையான அனுமதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
நீட் தேர்வு குறித்து திமுக முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் நிறைய பேசி இருக்கிறார்கள். இதை பேசக்கூடிய எந்த தகுதியும் திமுகவுக்கு கிடையாது.
அவர்கள் தான் 5 வருடமாக இதனை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு போனார்கள். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் நீட் தேர்வை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். எப்படி நிறுத்துவார்கள். அது பார்லிமென்டில் மசோதா நிறைவேற்ற வேண்டும்.
சுப்ரீம்கோர்ட் உத்தரவு, எப்படி நிறுத்துவீர்கள். தவறான நம்பிக்கையை மக்களிடத்தில் கொடுத்து இரண்டு வருடம் ஓட்டினார்கள். இப்பொழுது வந்து மேடையில் பேசுகிறார்கள். பேசக்கூடிய திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாருக்கும் கிடையாது.
நீட் தேர்வு வேண்டாம் என்பதில் நமது நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது, அதற்கான காலம் வரும் போது முதல் குரலாக கொடுப்போம். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இவரிடம் எதைப் பற்றி கேள்வி கேட்டாலும் திமுகவைப் பற்றி பேசுவதையே வழக்கமாக்கிக் கொண்டு உள்ளார்!
எங்களுக்கும் நீட் புடிக்காது. பசங்க கஷ்டப்பட்டு படிச்சு பரிட்சை எழுதி பாஸ் ஆவறது என்பது ரொம்ப கொடுமை. அவங்க நீட் ஒழிப்பு ரகசியம் தங்களிடம் இருக்கறதா மட்டும் புருடா விட்டாங்க. நாங்க அதுக்கும் மேல. நீட்டே எழுதாமல் டாக்டராகி அஞ்சே ரூவாக்கு சிங்கப்பூர் ரேஞ்சுக்கு வைத்தியம் பார்க்கும் ரகசியத்தை அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே சொன்னவங்க நாங்க. அக்காங்.
ரகசியம் சார் . .5 வருட ஆட்சி சார் .. 36000 கோடி சம்பாத்தியம் தான் ரகசியம்
நீட்டை நீக்கும் ரகசியம் தெரிந்த ஒரே கட்சியை இப்படியா கலாய்ப்பது..
ஏழு கடல் தாண்டி எட்டாவது மலைக்கு கீழே குகையின் பொந்துக்குள் இருக்கும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள கிளியின் வயிற்றில் நீட்டை நீக்கும் ரகசியம் உள்ளதாம். அந்த க்கூண்டின் சாவி திமுக விடம் ரகசியமாக இருக்கிறது.
காங்கிரஸை சரியாக கையாளும் திறமை திமுகவிற்கு மட்டுமே உண்டு. உங்களுக்கு அனுபவம் பத்தாது.
கையாண்டதினாலேதான் திமுக ஆட்சியை இழந்து புலம்பல் கதறல் நிலைக்கு வந்துவிட்டது.
நேத்து முளைச்ச புல்லு தகுதி பத்தி பேசுது
நேத்து முளைச்ச புல்லு ஏன் பேசுது. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து .நீட் தேர்வு ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று முந்தானாள் முளைத்த புல்லு ஏன் சொல்லுது
திமுகவினருக்கு எதைப்பற்றி பேசவும் எந்தவித தகுதியும் இல்லை.
விஜய் சார் நீட் ரத்து பண்ணிட்டு எல்லோரையும் டாக்டர் ஆக்கிடுவாரு,
அமைச்சரே ஜல்லிக்கட்டு வேண்டாம் என்றுதான் supreme கோர்ட் சொன்னது அப்புறம் எப்படி ஜல்லிக்கட்டு வந்தது. இதெல்லாம் தெரியாம ரீல்ஸ் போட்டுட்டு பொழப்ப ஓட்டுங்க
கடந்த ஐந்து வருட ஆட்சியில் இதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று யார் உங்களுக்கு சொன்னது.
மாநில பிளஸ் டூ தேர்வுகளில் தொடர்ந்து நடக்கும் முறைகேடுகள், மாநிலத்துக்கு மாநிலம் பாடத்திட்ட தராதர வேறுபாடுகள் காரணமாகவே நீட்டை கட்டாயமாக்கி உத்தரவிட்டது கோர்ட் . இப்போ அது வேண்டாமென கூறுபவர்கள் முறைகேடுகளுக்கு துணை போவதற்கு சமம். தமிழகத்தில் 60 சதவீதம் பேர் பாசாகியுள்ள தேர்வு எப்படி கசக்கும்.?