இனிமேல் கப்பல்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு; ஈரான் நிதி பயன்படுத்தப்படும் என்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்: மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றங்களால் இனிமேல் கப்பல்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க ஈரான் நிதியைப் பயன்படுத்தப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
அமைதி ஒப்பந்தம் முறிவு காரணமாக ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ள ஈரான், அதன் வாயிலாக செல்லும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வாயிலாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானின் அணுமின் நிலையம் அல்லது பாலங்கள் மீது அமெரிக்கா வெடிகுண்டு வீசும் என அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
ஆனாலும் கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கிறது. தற்போது இனிமேல் கப்பல்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க ஈரான் நிதியைப் பயன்படுத்தப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மறு அறிவிப்பு வரும் வரை, இனிமேல் கப்பல்கள், சரக்குகள் அல்லது அது தொடர்பான எதற்கும் ஏற்படும் அனைத்து சேதங்களும், அமெரிக்காவின் வசமுள்ள மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள ஈரான் பணத்திலிருந்து செலுத்தப்படும்.
இந்த இழப்பீடுகள் கணிசமானதாக இருக்கலாம், ஆனாலும், இதுவே நியாயமான ஒன்றாகும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஈரான் சொத்துக்களிலிருந்து எந்தெந்த சம்பவங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை.
ஈரானியர்களை அவர்கள் எண்ணெய் என்கிற இரத்தத்தை குடிக்க தான் ஆணவ அமெரிக்கா இவ்வளவு நாடகம் போடுகிறது எல்லோருக்கும் வீணா போன நேரம் வரும் அப்போது பார்ப்போம்
இப்போ உலகநாடுகளுக்கு புரியனும், அமெரிக்கா எதுக்கு எண்ணை வியாபாரம் டாலரில் செய்யுது என்று, இனி மேல் பிரான்ஸ் நாட்டைப்போல தங்கள் நாட்டு பணத்தில் வியாபாரம் செய்யுங்க, இந்தியா ரஷியாவுடன் உடன் படிக்கை செய்தது நல்லதாகி விட்டது.
ஈரானுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை அந்நாடு பயன்படுத்த தவறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். மக்கள்தான் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். பாவம்
ஓரு கட்டத்துக்குப் பிறகு சன்னி அரபு நாடுகள் பொறுமையை இழந்து ஷிஆ ஈரானுடன் சேரும் வாய்ப்புள்ளது. அவர்களுக்கு மனிதநேயத்தை விட மதம் முக்கியம்.
அவர்கள் இருவரும் கூட ஒற்றுமையா சேர்ந்துடுவாங்க போல, ஆனால் தமிழக பாஜகவில் இருக்கும் ஜாதிய வன்மத்தாலும் பொறாமையாலும் யாருமே கமலாலயம் பக்கம் தலை வைத்து படுக்கக்கூட மாட்டேங்குறாங்களே, அதுக்கு என்ன செய்ய போறீங்க எஜமான்? ஹி...ஹி...ஹி...இதை படித்துவிட்டு உங்களுக்கு கோபம் வந்தால் நீங்களும் அதில் ஒருவரே. ஹி...ஹி...ஹி...
அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM): ஈரான் மீதான தாக்குதல்களில், இராணுவக் கட்டளை மையங்கள், ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை சேமிப்புத் தளங்கள், தகவல் தொடர்பு வலையமைப்புகள், கடலோரக் கண்காணிப்பு அமைப்புகள், ரேடார்கள் மற்றும் கடல்சார் சொத்துக்களைக் குறிவைத்து, தொடர்ந்து 13 வது இரவாகத் தாக்குதல்களை நிறைவு செய்துள்ளது.மேலும்
-
தேசிய திறனாய்வு தேர்வில் தொடர் சாதனை படைக்கும் சூளாங்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
-
நாய்கள் கருத்தடை திட்டம் விரிவாக்கம் அமைச்சர் மதன்ராஜா
-
இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 26)
-
சட்டம் அறிவோம் பகுதிக்கு ஐகோர்ட் ஜாமினுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாமா?
-
நலம் நம் பலம் / முதலுதவி சிகிச்சையில் செய்யும் தவறு அரைகுறை அறிவால் போயிரும் உயிரு
-
மாநில மகளிர் ஹாக்கி துவக்கம்