அறுந்து கிடந்த மின்கம்பி மிதித்து ஒருவர் பலி

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சங்கராபுரம் அடுத்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி மகன் ராமு, 41; டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவரது மனைவி பச்சையம்மாள். ஒரு மகன், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை ராமு கரும்பு வயலுக்கு சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பி மிதித்ததால் சம்பவ இடத்திலேயே ராமு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து இறந்த ராமுவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement