டில்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்; 2500 பேரை அடையாளம் கண்ட போலீசார்
நமது டில்லி நிருபர்
டில்லியில் போராட்டக்காரர்கள் கத்திகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்; 2,500க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை டில்லி போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா (சிஜேபி) இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இதனால், போராட்டக்காரர்களை கலைக்க கைது நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்ட போதிலும், அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நிலைமையை சீர்செய்ய பாதுகாப்பு படையினர் முயன்றனர்.
மாணவர்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டத்தில் தேசத்துரோகிகள் ஊடுருவி இருப்பதாக கூறப்படும் நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கத்தி, வாள் மற்றும் கட்டை போன்ற பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது விசாரணையில், போராட்டக்காரர்கள் கத்திகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியது உறுதியானது.
ஜூலை 21ம் தேதி முதல் ஜூலை 23ம் தேதி வரை 2,500க்கும் மேற்பட்ட அத்தகைய நபர்களை டில்லி போலீசார் கண்டறிந்துள்ளனர். இதுவரை, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டில்லி போலீசார் 15க்கும் மேற்பட்ட எப்ஐஆர்களை பதிவு செய்துள்ளனர். போலீசார் மீதான தாக்குதல்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் குறித்த தனது விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
போராடுபவன் பல பேரை பார்த்தால் 50 - 70 வயது உள்ளவன் போல தெரிகிறான். இவனுக எந்த கல்லூரியில் மெடிக்கல் சீட்டுக்கு போராடுகிறான். இவன் எல்லாம் மாணவனா அல்லது டெல்லி, பக்கத்து மாநில ரவ்டி கூட்டமா?
1 இந்தியாவில் பல போராட்டங்கள் - விவசாயிகள், மாணவர்கள், காலிஸ்தானிகள், அமைதி வழி சமூக போராட்டங்கள் பல தீவிரவாத நாடுகளிடம் இருந்து பணம் பெற்று நடத்தப்படுவது வேதனை.
2 இதற்கான பணம் அமெரிக்கா மதமாற்ற NGO கள், பாக்கிஸ்தான், சவூதி, கத்தார், சீனா போன்ற நாடுகளில் இருந்து வருகிறது.
3 ஹவாலா மூலம் இது வரை மூலம் வந்த பணம் இப்போது, ஸ்விக்கி, ஸ்மோடோ போன்ற இணைய தளங்கள் மூலம் கத்தார், அரேபியா நாடுகளில் இருந்து உணவு இலவச ஆர்டர் செய்யப்பட்டு, போராட்ட களத்தில் டெலிவரி செய்யப்படுகிறது.
4 இந்திய வளர்ச்சியை பிடிக்காத பல ஏகாதிபத்திய நாடுகள், உள்ளூர் அரசியல் சக்திகள் துணையுடன் சேர்ந்து இதை நடந்துகின்றன.
5 இதில் உள்ளூர் மற்றும் பக்கத்து மாநில தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சக்திகள் தினமும் பணம் என்ற அடிப்படையில் பணி அமர்த்தப்படுகிறார்கள்.
6 இது போன்ற சம்பவங்களில் மத்திய அரசின் தூக்கம் பிரச்சனைகளை பெரிது ஆக்குகிறது. நீட் பிரச்சனையில் இப்போது உள்ள நடவடிக்கையை 3 மாதத்திற்கு முன்னால் எடுத்து இருந்தால், பிரச்சனை இந்த அளவு தலை தூக்கி இருக்காது.
ஊடகங்களால் ஒளிபரப்பப்படும் ஏறக்குறைய அனைத்து காணொளிகளிலும் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். போராட்டக்காரர்களில் பெரும்பான்மையானவர்கள் மாணவர்கள் அல்ல என்பது தெளிவாகிறது. அவர்களில் பெரும்பாலோர் சில தீய நோக்கங்களைக் கொண்ட நடுத்தர வயது uncle களும் aunty களும் ஆவர். நமது நாட்டின் நீதித்துறையும் சட்ட அமலாக்கத் துறையும் மிகவும் திறமையானவை, மேலும் இந்தக் குற்றவாளிகள் அவர்களின் நீண்ட கரங்களிலிருந்து தப்பிக்க முடியாது.
போராட்டத்தின் போது மாணவர்கள் வேடத்தில் புகுந்து அட்டூழியம் செய்த அந்தக் குண்டர்களால் இனி சட்டத்தின் நீண்ட கரங்களிலிருந்து தப்பிக்க முடியாது. அநேகமாக, அந்தக் குண்டர்கள் மிக நீண்ட காலம் சிறையில் இருக்க நேரிடும், மேலும் ஒரு நீண்ட சட்டப் போராட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சட்டத்தை மதிக்கும் குடிமகனாக இருப்பது எப்படி என்றும், நாட்டின் சட்டத்திற்குக் கீழ்ப்படிவது எப்படி என்றும் இந்த அயோக்கியர்கள் இப்போது மிகக் கடினமான முறையில் கற்றுக்கொள்வார்கள். பாரதம் வாழ்க. வந்தேமாதரம்.
இவர்களால் எப்பொழுதும் நாட்டிற்க்கு அச்சுறுத்தல் தான் ஆகவே செய்ய வேண்டிய தை ,,,,,
உன்மையான குற்றவாளிகள் என்றால் உள்ளே வைத்து நன்றாக உபசரித்து நடைப்பிணமாக வெளிய விட வேண்டும்.
super
ஒருவனையும் விடக்கூடாது
மோஹித் என்பவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு பட்டப்படிப்புக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். ஆனால் கற்பிப்பதற்குப் பதிலாக, அவர் ஜந்தர் மந்தரில் பதாகையை பிடித்தபடி பிரதமர் மோடியை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பிய அடுத்த கணமே, அவருக்குப் பணிநீக்கக் கடிதம் வழங்கப்பட்டது. கற்பிப்பதற்காக உங்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டால், கற்பியுங்கள். தொழில்முறைப் பொறுப்புகளைப் புறக்கணித்துவிட்டு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது. கற்பிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்யும் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜமீன்தாரி தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் விரைவில் இதே போன்ற விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று நம்புவோம்.
கடந்த இரண்டு நாட்களில் முக அங்கீகார அமைப்பு (FRS) மூலம் சுமார் 2,500 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகவல்களின்படி, அவர்களில் பலர் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மாணவர்கள் போல் நடித்ததாகவும், அவர்களுக்கு முந்தைய குற்றப் பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களின் விவரங்கள் மாவட்டப் பிரிவுகளுடன் பகிரப்பட்டுள்ளன, அவர்களின் நடமாடும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன, மேலும் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. வன்முறையைத் தூண்டுவதிலும், பாதுகாப்புப் படையினருடன் மோதல்களை ஏற்படுத்துவதிலும் அவர்கள் முக்கியப் பங்கு வகித்ததாகக் காவல்துறை சந்தேகிக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்
-
தவெக அரசை சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கு; செந்தில் பாலாஜியிடம் விசாரணை
-
நீட் எதிர்ப்பு போராட்டம்; குபீர் போராளிகளுக்கு கொண்டாட்டம்!
-
இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்
-
காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்!
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)