ஆழ்துளை கிணறு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

திருபுவனை: மதகடிப்பட்டு கிராமத்தில் ரூ. 14.5 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

திருபுவனை தொகுதி, மதகடிப்பட்டு கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆலக்கரை வீதியில், பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டத்தின் சார்பில், ரூ. 14.5 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவானந்தம், இளநிலை பொறியாளர் கார்த்திக், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement