ருமேனியாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு
நமது நிருபர்
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ருமேனியா புக்கரெஸ்ட் பொருளாதார ஆய்வுப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அந்த வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ருமேனியா சென்றார். அவர் அந்நாட்டு அதிபர் நிகோசர் டென்னை சந்தித்தார்.
அவருக்கு ருமேனியா புக்கரெஸ்ட் பொருளாதார ஆய்வுப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. பிறகு கவுரவ முனைவர் பட்டம் வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது: அனைத்து சமூகத்தினருக்கும் நன்றி. இந்தியா மற்றும் ருமேனியா மக்களின் நட்புறவின் பிரதிபலிப்பாக 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த அங்கீகாரத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.



ஜனாதிபதி திரவுபதி முர்மு -க்கு வாழ்த்துக்கள்.மேலும்
-
மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர், அரசு அலுவலர்கள் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க வலியுறுத்தல்
-
வாசகர்களை மாண்போடு அணுகும் நாளிதழ்!
-
மூன்று மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கியது தமிழக அரசு: வட்டி செலவு மட்டும் ரூ.14,618 கோடி
-
புகையிலை பறிமுதல் கடத்திய முதியவர் கைது
-
டிப்பர் லாரி மோதி தபால் அலுவலர் பலி
-
சேலத்தில் ஆடித்திருவிழா ஆக., 5ல் விடுமுறை