மாநகராட்சி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர்:தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், கரூர் மாநகராட்சி அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், பதவி உயர்வு, பணியிடை மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும், 2023 சட்டத்தின்படி நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் அன்பழகன், செயலாளர் பொன் ஜெயராம் உள்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement