அரசியல் நோக்கத்துடன் என் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது; அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு
திருச்சி: பழநியில் நிலத்திற்கு ரூ.100 கோடி மதிப்பு இருப்பது வழக்கிற்கு பின்பு தான் தெரியும்; அரசியல் நோக்கத்துடன் என் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது என அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: எதை வைத்து அரசியல் பண்ண வேண்டும் என்று தெரியாமல் இதை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் பழநியில் அப்படி ஒரு இட இருக்கிறது, அந்த இடம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மதிப்பு இருக்கிறது என்பதே எனக்கு இந்த வழக்கிற்கு பிறகு தான் தெரியும்.
நிலம் பத்திர பதிவு ஜூலை 7ம் தேதி நடந்து இருக்கிறது. ஜூன் 30ம் தேதியே அந்த நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்துள்ளது. விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என நான் தான் முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை வைத்தேன்.
உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயமாக தண்டிக்கப்படும். அரசியல் நோக்கத்துடன் என் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. எனது உறவினர்கள் இதை செய்துவிட்டார்கள், நான் தான் இதற்கு பின்னால் இருக்கிறேன் என பழி சுமத்துகின்றனர்.
இந்த மாதிரி எல்லாம் அரசியல் செய்து மக்கள் மத்தியில் என் பெயரை கெடுக்க வேண்டும், ஆட்சியின் பெயரை கெடுக்க வேண்டும். முதல்வரின் பெயரை கெடுக்க வேண்டும் என்று எல்லாம் யோசிக்காமல் மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும் என்று யோசித்தால் மக்கள் உங்களை கொஞ்சமாவது திரும்பி பார்ப்பார்கள்.
போராட்டம் நடத்தும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று தெளிவாக முதல்வர் விஜய் கூறியிருக்கிறார். நீட் தேர்வை முற்றிலுமாக அகற்ற வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்; இது தான் நிரந்தர தீர்வு என முதல்வர் விஜய் கூறியிருக்கிறார்.
மாணவர்களின் போராட்டத்தை மதிக்கிறோம். சில பேர் இதுக்குள் புகுந்து முதல்வருக்கு எதிராக திருப்ப வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டார்கள் என்றால் அது அரசு எப்படி கையாள வேண்டுமோ, அதனை அப்படி கையாளும். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இவ்வளவு பெரிய சொத்து மோசடி உமக்குத் தெரியாமலா நடந்திருக்கும் ஏழை பாழைகளுக்கு தான் மனசாட்சி கடவுள் பற்று கடவுளுக்கு பயப்படுவது எல்லாம் அரசியல்வாதிகளுக்கு எங்கே இருக்கப் போவுது .
திராவிடர்கள் தலையெடுத்து இந்துக்கோவில்களை மொட்டையடித்து இன்புற்று வாழ்ந்தார்கள். இன்று வேறு முகத்துடன் வாழ்கிறார்கள். ஆள் மாறினாலும் காட்சி மாறவில்லை.
ஒரூ முஸ்லிம் எங்கே இருந்தாலுவ் முஸ்லீமாகத்தான் இருக்கிறார். உதாரணத்துக்கு உங்கள் கட்சி மற்றும் கூட்டணியில் உள்ளவர்கள் யாரும் முஸ்லிம்கள் ஒத்துக்கொள்ளாத எதையும்
ஆதரித்து பேசவில்லை. ஆனால் அறநிலையத்துறைக்கு இந்துவாக இருப்பதால் மந்திரி ஆகிய நீங்கள் என்ன செய்தீர்கள்? வீணாப்போன,இந்து எதிரி, ஈர வெங்காய தாடிக்கார மனிதர், இந்திய விடுதலையை கறுப்பு நாளாக அனுஷ்டித்த தேச எதிரியை போற்றிப்புகழ்ந்து பேசுவதுடன், உங்கள் தலைவருக்கு புத்தகம் பரிசளித்ததீர்கள்.
போகட்டும் உங்கள்கட்சி தானே, அதிலுள்ள முஸ்லிம்கள் சகோதரர்கள்,ஈர வெங்காயமனிதர் முஸ்லிம்களின் கடவுளான அல்லாவை எதிர்த்தும் முஸ்லீம்களை துலுக்கர்கள் என வக்கிரமாக பேசியதும் போனால் போகட்டும் என மன்னித்துவிட்டீர்களா என கேட்டுப்பாருங்கள். ஒரு இந்து மட்டும் ஏன் குழம்புகிறார்??.அடிப்படையிலேயே இந்துக்களையும் இந்து கடவுள்களையும் கேவலப்படுத்திய தாடிக்கார கிழவரை வானளாவ புகழ என்ன காரணம்???.
முஸ்லிம்களுக்கு கடவுள் பற்று உள்ளது.இந்து அதுவும் அறநிலையத்துறை அமைச்சர் தாடிக்காரரைப் பகழாவிட்டால் என்ன குறைவு. மேலும் ஒரு ஒண்ணேகால் வருடமாகத்தான், திமுகவுக்கும் விசிகவுக்கும் பயந்த உங்க தளபதி தலைவர்களீல் ஒரூவராக அறிவிச்சார். ஏன் இன்னொரு கட்சிக்காரனுடைய பிரச்னை மிக்க தலைவரை தேவையில்லாம தத்து எடுத்துகிட்டு கஷ்டப்படுறீங்க???.அப்படி ஒன்னும் தவிர்க்க முடியாத ஆளுமை மிக்க மனிதர் அவரல்ல. இந்துவான நீங்கள் இந்து தெய்வங்களை மற்ற கிரிமினல்களிடமிருந்து காக்க உறுதி எடுங்க. தனிமனித ஒழுக்கம் தேவையில்லைன்னு சொன்ன வயதான கிழவரை திராவிட திருட்டு கட்சிகள் தலைவராக கொண்டாடட்டும். தவெகவிற்கு அந்த வயதான மனிதர் தேவையற்றவர். அவரை கொண்டாடாவிட்டால் தான் முஸ்லீம்களும் கிறித்துவ மக்களும் நிம்மதி அடைவார்கள்
இந்து அறநிலையத்துறை அமைச்சரே
ஹிந்துவாகவே இருங்க தப்பில்லை
பழனி நில தகராறு விவகாரத்தில் பெரிய பெரிய அரசியல்வாதிகளின் ஈடுபாடு இருக்கிறது பின்புலம் அவர்களது ஆதரவு முழுக்க முழுக்க உள்ளது ஆனால் அதை திசை திருப்பவே அமைச்சரின் குடும்பத்தை அனாவசியமாக இழுக்கிறார்கள் அமைச்சரின் உறவினர்கள் இதை செய்துவிட்டார்கள் எனவும் , அவர்தான் தான் இதற்கு பின்னால் இருக்கிறார் என பழி சுமத்துகின்றனர்.இது வெறும் கட்டுக்கதை அமைச்சர் துணிச்சலாக இதை கையாண்ட விதம் அவர்களுக்கு பிடிக்கவில்லை எப்படி அதை
குலைக்கலாம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு பழியை அவர்மீது சுமத்துகிறார்கள் அமைச்சர் இந்த பெரிய திருட்டுத்தனத்தை கண்டு பிடித்து வெளியே கொண்டுவரவில்லை என்றால் அது எவ்வளவோ மகா பாவிங்களின் கைகளுக்கு சென்றிருக்கும் அதற்கு இப்போது ஒரு விடி மோட்சம் உண்டாயிற்று அமைச்சரை பாராட்டுவோம் புகழுவோம்
ஒரு துறையில் பணி செய்யும்போது முதலில் செய்யவேண்டியது அந்த துரையின் சட்டங்கள் என்ன ,அவைகள் எல்லாம் சட்டப்படி நடக்கின்றனவா என்றறியவேண்டும் .அதுதான் செய்யும் பனியின் திறமையை கூட்டும் .ஆனால் அறநிலைய துறையில் பலகாலங்களாக பணிசெயபவர்கள் யாவரும் படித்து அறிந்து பணிபுரிந்ததாக தெரியவில்லை .அறநிலைய சட்டத்தையே கம்ஸ்சினரோ,துறை செயல் அலுவலரோ ,அல்லது துறை மந்திரியோ யாரும் படித்ததாக தெரியவில்லை .இதை மக்களுக்கும் பலகாலமாக தெரிவித்து வருகிறேன் யாவரும் கவலைகொண்டதாக தெரியவில்லை .இந்த சட்டம் வழிபாட்டுத்தலங்களை கட்டுப்படுத்தாது என்று சட்டத்தின் 107 வது பிரிவில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது .அதன் நகல் ,107. Act not to affect rights under Article 26 of the Constitution.— Nothing contained in this Act shall, save as otherwise provided in section 106 and in clause 2 of Article 25 of the Constitution, be deemed to confer any power or impose any duty in contravention of the rights conferred on any religious denomination or any section thereof by article 26 of the constitution "
இதை அரசின் கவனத்திற்கு கொண்டுவாருங்கள் .இதன் அர்த்தமே என்ன என்று கேளுங்கள் .ஹிந்து கோவில்க்லைன் எல்லா பிரச்சனைகளுக்கு விடை கிடைத்துவிடும் .
First of all this fellow doesnt have any qualities even to be a MLA
உமக்கு என்ன நல்ல பெயர் இருக்கிறது? தாங்களே இப்ப தான் அரசியல் அரிச்சுவடியை கத்து கொண்டு இருக்கிறீர்கள் ? அதும் சரிவர கற்கவில்லை என்பது வேறு விஷயம்?? வீண் பழி சுமத்தும் அளவுக்கு தங்கள் என்ன அரசியல் ஜாம்பவான் ஜெயலலிதா கருணாநிதி , ராகுல், வைகோ, மோடி, அல்லது மலரின் ஆசிரியர் ராமசுப்பு, ஆதிமூலம் உள்மூலம் வெளி மூலம் போன்று பெரிய ஆட்களையோ நீங்கள்???
70 வருடமா இதைத்தான் செய்கிறார்கள் அமைச்சரே. இன்னும் 70 வருடமானாலும் திருந்த மாட்டானுக
தாங்கள் கையாலாகாதவன் என்று தெரிகிறது
நீட் தேர்வை முற்றிலுமாக அகற்ற வேண்டும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் இது தான் நிரந்தர தீர்வு என முதல்வர் விஜய் கூறியிருக்கிறார். இந்த கூற்று அரசியல் வசனம். வாழ்க்கைக்கு ஒத்து வராது.
நீட் தேர்வினை யார் நினைத்தாலும் இனி நீக்கவே முடியாது. அரசியல் கட்சிகள் நினைத்தால் நீர்த்துப் போகச் செய்யலாம். ஆனால் மோடி அரசு நீட் தேர்வினை நன்றாக நடத்தி வருகிறது. நீர்த்து போக விடவில்லை. காங்கிரஸ் அரசாக இருந்தால் எதுவும் நடக்கலாம்.
அடுத்தது கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எதற்காக மாற்ற வேண்டும் ? கண்டவனைப் பற்றியெல்லாம் மாணவர்கள் படித்து நாசமாகப் போக வேண்டுமா ? தேவையில்லாதவனை, தமிழுக்கும் தமிழகத்துக்கும் தேவையே இல்லாத ஒருவனை எல்லா ஊர்களிலும் அமர வைத்துள்ளது தான் சாதனை வேறு எதுவும் இல்லை.
தமிழகக் கல்வியும் இப்படியே ஆகி விடும். மத்திய அரசிடம் இருப்பது தான் இந்தியாவுக்கும் நமது மாநிலத்திற்கும் நல்லது.