ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேருக்கு 'காப்பு'

தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஸ்டேஷன் போலீசார், ஜவளகிரி பகுதியில் ரோந்து சென்றனர். அவ்வழியாக வந்த சரக்கு வாக-னத்தை நிறுத்திய போது, டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். அதனால் தங்களது வாகனத்தில் போலீசார் துரத்தி சென்று, வனத்துறை சோதனைச்சாவடி அருகே, மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.


அப்போது, ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரிந்தது. இதனால் வாகனத்தில் இருந்த தேன்கனிக்-கோட்டை சாகர் லேஅவுட்டை சேர்ந்த ஷேக்கவுஸ், 26, வாஜித், 54, ஹர்பாஸ், 26, ஆகிய, 3 பேரை கைது செய்த போலீசார், 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Advertisement