வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல்’

கோவை: மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் கடை நடத்துவோரில் சிலர், நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வரி வசூலர்கள் பலமுறை நேரில் தெரிவித்தும் வாடகை செலுத்தாமல் இருந்தனர்.

டி.பி.ரோட்டில் 1 கடை, ஆரோக்கியசாமி ரோட்டில் 3 கடைகள், டி.வி. சாமி ரோட்டில் 1 கடை, சுப்ரி வீதியில் 1 கடை, துடியலுாரில் 2 கடைகள், தக்காளி மார்க்கெட்டில் 2 கடைகள் என 10 கடைகள் நேற்று மூடப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டன.

இக்கடைகளை நடத்தி வந்தவர்கள் மாநகராட்சிக்கு ரூ.54.38 லட்சம் வாடகை செலுத்த வேண்டியிருந்தது. அதிரடி நடவடிக்கை எடுத்ததால், ஒரே நாளில் ரூ.25 லட்சம் வசூலிக்கப்பட்டதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement